1. இறைவா, என் இறைவா, ஆர்வமுடன் உம்மை நாடுகிறேன்: நீரினின்றி வறண்டு கிடக்கும் நிலம் நீரை நோக்கியிருப்பது போல் என் உள்ளம் உம்மீது வேட்கை கொண்டுள்ளது; என் உடலும் உம்மை ஆசிக்கிறது.
|
2. உமது திருத்தலத்தில் உமது பிரசன்னத்தை நோக்குகிறேன்: உமது வல்லமையையும் மாட்சியையும் நான் காண விழைகிறேன்.
|
4. இங்ஙனம் என் வாழ்நாளில் உம்மை வாழ்த்துவேன்: உமது பெயரைச் சொல்லி உம்மை நோக்கி என் கைகளை உயர்த்துவேன்.
|
5. செழுமையும் கொழுமையும் பெறுவது போல் என் உள்ளம் நிறைவுபெறும்; என் வாயில் மகிழ்ச்சி ஒலிக்கும்; என் நாவில் புகழ்ச்சி எழும்.
|
11. அரசனோ கடவுளை நினைத்து மகிழ்வுறுவார்; கடவுள் பெயரைச் சொல்லி ஆணையிடுவோர் அனைவரும் புகழ் பெறுவர்: தீயவை பேசுவோரின் வாய் அடைப்படும்.
|