3. எவ்வளவு காலம் நீங்கள் ஒருவனுக்குத் தீமை செய்ய நினைப்பீர்கள்? சாய்ந்திருக்கும் மதில் போலவும், இடிந்திருக்கும் சுவர் போலவும் உள்ள ஒருவனை விழத்தாட்ட நீங்கள் எப்போதுமே நினைப்பீர்களா?
|
4. நான் இருக்கும் உன்னத இடத்திலிருந்து என்னைத் தள்ளி விட அவர்கள் உண்மையாகவே சதி செய்கிறார்கள்: பொய் சொல்வதில் இன்பம் காண்கிறார்கள். உதட்டால் பேசுவது ஆசி மொழிகள் உள்ளத்தால் நினைப்பது சாபமொழி.
|
8. நாட்டு மக்களே, எந்நாளும் அவர் மீது நம்பிக்கை வையுங்கள்; உங்கள் உள்ளத்தை அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள்: கடவுளே நமக்கு அடைக்கலம்.
|
9. மனுமக்கள் அனைவரும் ஒரு சிறு மூச்சே: மனிதர்கள் வெறும் மாயை தான். தராசில் வைத்தால் அவர்கள் கனம் மேலே தான் செல்லும். எல்லாரும் சேர்ந்தாலும் ஒரு மூச்சை விட இலேசானவர்களே!
|
10. கொடுமை செய்வதில் நம்பிக்கை வைக்க வேண்டாம்; பொருளைப் பறிப்பதில் வீண் பெருமை கொள்ள வேண்டாம்: உங்கள் செல்வம் பெருகினால், அதற்கு உங்கள் உள்ளத்தைப் பறிகொடுக்க வேண்டாம்.
|
11. இது ஒன்றைக் கடவுள் மொழிந்தார், திரும்பத் திரும்ப நான் அதைக் கேட்டிருக்கிறேன்; கடவுளைச் சார்ந்தது வல்லமை.
|
12. ஆண்டவரே, உம்மைச் சார்ந்தது அருள்: ஏனெனில், நீர் ஒவ்வொருவனுக்கும் அவனவன் செயலுக்கேற்ப கைம்மாறு அளிப்பீர்.
|