தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. என் இறைவா, என் எதிரிகளினின்று என்னை விடுவித்தருளும்: எனக்கெதிராய் எழும்புவோரிடமிருந்து எனக்குப் பாதுகாப்பளிப்பளித்தருளும்.
2. தீமை செய்வோரிடமிருந்து எனக்கு விடுதலையளித்தருளும்: இரத்த வெறியர்களிடமிருந்து என்னைக் காத்தருளும்.
3. இதோ! அவர்கள் என் உயிருக்கு உலை வைக்கிறார்கள்; வலியோர் எனக்கெதிராய்ச் சதி செய்கிறார்கள்; ஆண்டவரே, என்னிடம் தீவினையோ, பாவமோ இல்லை.
4. என்னிடம் குற்றமில்லாதிருந்தும் என்னை எதிர்க்க விரைகின்றனர், என்னைத் தாக்குகின்றனர்: விழித்தெழும், எனக்குத் துணைசெய்யும், என் நிலையைப் பாரும்.
5. ஏனெனில், படைகளின் ஆண்டவரே, இஸ்ராயேலின் இறைவன் நீரே! விழித்தெழும், புற இனத்தார் அனைவரையும் தண்டிக்க வந்தருளும்: எனக்குச் சதி செய்பவர்கள் யார் மீதும் இரக்கம் காட்டாதேயும்.
6. மாலை நேரத்தில் திரும்பி வருகின்றனர்; நாய்களைப் போல் ஊளையிடுகின்றனர்: ஊரைச் சுற்றித் திரிகின்றனர்.
7. இதோ அவர்கள் வாயிலிருந்து புறப்படுவது திமிரான பேச்சு, அவர்கள் உதடு உரைப்பது பழிச் சொற்களே: 'யார் இப்பேச்சைக் கேட்கப் போகிறார்கள்?' என்கின்றனர்.
8. ஆனால், ஆண்டவரே, நீர் அவைகளைப் பார்த்து நகைக்கிறீர்: புற இனத்தார் அனைவரையும் ஏளனம் செய்கின்றீர்.
9. எனக்கு வலிமையானவரே, உம்மையே நோக்கியுள்ளேன்: ஏனெனில் இறைவா, நீர் என் பாதுகாப்பு அரண்.
10. என் இறைவனே, என்மீது இரங்குபவர்: என் எதிரிகள்மீது வெற்றிகொண்டு மகிழ எனக்கு அருள்வாராக.
11. என் மக்களுக்கு அவர்கள் இடறலாகாதபடி இறைவனே, அவர்களைக் கொன்றுவிடும்; உமது வலிமையால் அவர்களைக் கலங்கடித்து விடும்: எங்கள் கேடயமாகிய ஆண்டவரே, அவர்களைத் தாழ்த்திவிடும்.
12. பாவமே அவர்கள் பேசும் சொற்கள், பாவமே அவர்கள் நாவினின்றெழும் பேச்சு: தங்கள் தற்பெருமையிலும் பேசும் சாபனைகளிலும் பொய் வார்த்தைகளிலும் அவர்கள் அகப்பட்டுக் கொள்வார்களாக.
13. சினங்கொண்டு அவர்களை அழித்து விடும்; இனி அவர்கள் இராதபடி ஒழித்து விடும்: யாக்கோபின் இனத்தாரிடையிலும் பூவுலகெங்கும் ஆள்பவர் கடவுளே என்று அனைவரும் அறிவார்களாக.
14. மாலை நேரத்தில் திரும்பி வருகின்றனர்: நாய்களைப் போல் உறுமுகின்றனர், ஊரைச் சுற்றித் திரிகின்றனர்.
15. இரையைத் தேடி அலைகின்றனர்: உணவு கிடைக்காவிட்டால் ஊளையிடுகின்றனர்.
16. நானோ உமது வல்லமையைப் புகழ்ந்து பாடுவேன்: காலை தோறும் உமது இரக்கத்தை நினைத்து அக்களிப்பேன். ஏனெனில், நீரே எனக்கு அரணாயிருக்கிறீர். நெருக்கிடையான வேளையில் எனக்கு அடைக்கலமாயிருக்கிறீர்.
17. எனக்கு வலிமையானவரே, உமக்குப் புகழ் பாடுவேன்: ஏனெனில் இறைவனே, நீரே எனக்குப் பாதுகாப்பு அரண்; என் இறைவனே, என் மீது இரங்குபவர் நீரே!

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 59 of Total Chapters 150
சங்கீதம் 59:47
1. என் இறைவா, என் எதிரிகளினின்று என்னை விடுவித்தருளும்: எனக்கெதிராய் எழும்புவோரிடமிருந்து எனக்குப் பாதுகாப்பளிப்பளித்தருளும்.
2. தீமை செய்வோரிடமிருந்து எனக்கு விடுதலையளித்தருளும்: இரத்த வெறியர்களிடமிருந்து என்னைக் காத்தருளும்.
3. இதோ! அவர்கள் என் உயிருக்கு உலை வைக்கிறார்கள்; வலியோர் எனக்கெதிராய்ச் சதி செய்கிறார்கள்; ஆண்டவரே, என்னிடம் தீவினையோ, பாவமோ இல்லை.
4. என்னிடம் குற்றமில்லாதிருந்தும் என்னை எதிர்க்க விரைகின்றனர், என்னைத் தாக்குகின்றனர்: விழித்தெழும், எனக்குத் துணைசெய்யும், என் நிலையைப் பாரும்.
5. ஏனெனில், படைகளின் ஆண்டவரே, இஸ்ராயேலின் இறைவன் நீரே! விழித்தெழும், புற இனத்தார் அனைவரையும் தண்டிக்க வந்தருளும்: எனக்குச் சதி செய்பவர்கள் யார் மீதும் இரக்கம் காட்டாதேயும்.
6. மாலை நேரத்தில் திரும்பி வருகின்றனர்; நாய்களைப் போல் ஊளையிடுகின்றனர்: ஊரைச் சுற்றித் திரிகின்றனர்.
7. இதோ அவர்கள் வாயிலிருந்து புறப்படுவது திமிரான பேச்சு, அவர்கள் உதடு உரைப்பது பழிச் சொற்களே: 'யார் இப்பேச்சைக் கேட்கப் போகிறார்கள்?' என்கின்றனர்.
8. ஆனால், ஆண்டவரே, நீர் அவைகளைப் பார்த்து நகைக்கிறீர்: புற இனத்தார் அனைவரையும் ஏளனம் செய்கின்றீர்.
9. எனக்கு வலிமையானவரே, உம்மையே நோக்கியுள்ளேன்: ஏனெனில் இறைவா, நீர் என் பாதுகாப்பு அரண்.
10. என் இறைவனே, என்மீது இரங்குபவர்: என் எதிரிகள்மீது வெற்றிகொண்டு மகிழ எனக்கு அருள்வாராக.
11. என் மக்களுக்கு அவர்கள் இடறலாகாதபடி இறைவனே, அவர்களைக் கொன்றுவிடும்; உமது வலிமையால் அவர்களைக் கலங்கடித்து விடும்: எங்கள் கேடயமாகிய ஆண்டவரே, அவர்களைத் தாழ்த்திவிடும்.
12. பாவமே அவர்கள் பேசும் சொற்கள், பாவமே அவர்கள் நாவினின்றெழும் பேச்சு: தங்கள் தற்பெருமையிலும் பேசும் சாபனைகளிலும் பொய் வார்த்தைகளிலும் அவர்கள் அகப்பட்டுக் கொள்வார்களாக.
13. சினங்கொண்டு அவர்களை அழித்து விடும்; இனி அவர்கள் இராதபடி ஒழித்து விடும்: யாக்கோபின் இனத்தாரிடையிலும் பூவுலகெங்கும் ஆள்பவர் கடவுளே என்று அனைவரும் அறிவார்களாக.
14. மாலை நேரத்தில் திரும்பி வருகின்றனர்: நாய்களைப் போல் உறுமுகின்றனர், ஊரைச் சுற்றித் திரிகின்றனர்.
15. இரையைத் தேடி அலைகின்றனர்: உணவு கிடைக்காவிட்டால் ஊளையிடுகின்றனர்.
16. நானோ உமது வல்லமையைப் புகழ்ந்து பாடுவேன்: காலை தோறும் உமது இரக்கத்தை நினைத்து அக்களிப்பேன். ஏனெனில், நீரே எனக்கு அரணாயிருக்கிறீர். நெருக்கிடையான வேளையில் எனக்கு அடைக்கலமாயிருக்கிறீர்.
17. எனக்கு வலிமையானவரே, உமக்குப் புகழ் பாடுவேன்: ஏனெனில் இறைவனே, நீரே எனக்குப் பாதுகாப்பு அரண்; என் இறைவனே, என் மீது இரங்குபவர் நீரே!
Total 150 Chapters, Current Chapter 59 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References