3. எனக்குற்ற துயரத்தால் நான் கலங்குகிறேன்: எதிரியின் குரலும், பாவியின் இரைச்சலும் கேட்டு நான் பெரிதும் அவதியுறுகிறேன். அவர்கள் எனக்குத் துன்பம் விளைவிக்கின்றனர்: வெகுண்டெழுந்து என்னைத் தாக்குகின்றனர்.
|
6. புறாவைப்போல் எனக்குச் சிறகுகள் இல்லையே! இருந்தால் பறந்து போய் அமைதியடைந்திருப்பேனே!" என்று சொல்லிக் கொண்டேன்.
|
9. ஆண்டவரே, அவர்களுடைய மொழிகளைக் கலங்கடித்து, குழப்பம் உண்டாகச் செய்யும்: ஏனெனில், நகரத்தில் வன்முறையும் கலகமும் காண்கிறேன்.
|
10. இரவும் பகலும் அவைகள் அதன் மதில்களைச் சுற்றி வருகின்றன. அதன் நடுவே தீச் செயல்களும் அடக்கு முறையும் தான் உள்ளன.
|
12. என் எதிரி என்னை நிந்தித்திருந்தால் அதைப் பொறுத்துக் கொண்டிருப்பேன்: என்னைப் பகைத்தவன் எனக்கு எதிராய்க் கிளர்ந்து எழுந்தால், அவனிடமிருந்து தப்பியோடி ஒளிந்திருப்பேன்.
|
14. உன்னோடு இனிய நட்புறவு கொண்டிருந்தேனே! விழாக் கூட்டத்தில் இறைவனின் இல்லத்தில் நாம் ஒன்றாய் இருந்தோமே!
|
15. மரணம் அவர்கள் மேல் வந்து விழுவதாக; உயிரோடு அவர்கள் கீழுலகுக்குச் செல்வார்களாக: ஏனெனில், அக்கிரமம் அவர்கள் இல்லங்களில் அவர்களிடையே இருக்கின்றது.
|
17. காலையிலும் மாலையிலும் நண்பகலிலும் புலம்புகிறேன்; பெருமூச்சு விடுகிறேன்: அவர் என் குரலுக்குச் செவிசாய்ப்பார்.
|
18. எனக்கெதிராய் உள்ளவர் பலராயினர்: என்னைத் துன்புறுத்தும் இவர்கள் கையினின்று அவர் என் ஆன்மாவை மீட்டு, அமைதி நிலவும் இடத்துக்கு அழைத்துச் செல்வார்.
|
19. என்றென்றும் ஆட்சி செய்பவரான கடவுள் எனக்குச் செவிசாய்த்து அவர்களை ஒடுக்கி விடுவார்: ஏனெனில், அவர்கள் மனமாற்றம் அடையார், கடவுளுக்கு அஞ்சார்.
|
20. ஒவ்வொருவனும் தனக்கு அறிமுகமானவர்களுக்கெதிராகக் கை நீட்டுகின்றான்: தான் செய்த உடன்படிக்கையை மீறுகின்றான்.
|
21. அவன் பேச்சு வெண்ணெயை விட மிருதுவாயுள்ளது: அவன் நெஞ்சமோ போர் மனம் படைத்தது. அவன் சொற்கள் எண்ணெயை விட இனிமையாயுள்ளது: ஆனால் ஓங்கிய வாள் போன்றவை.
|
22. ஆண்டவர் மீது உன் கவலையைப் போட்டு விடு, அவர் உன்னை ஆதரிப்பார்: நீதிமான் என்றும் நிலைகலங்க விடமாட்டார்.
|
23. இறைவா, நீர் அவர்களை அழிவுப் பாதாளத்தில் விழச்செய்வீர்; இரத்த வெறியர்களும் வஞ்சகர்களும் தம் வாழ்நாளில் பாதியும் காணமாட்டார்கள்: நானோவெனில், ஆண்டவரே, உம்மையே நம்புகிறேன்.
|