3. ஆண்டவரே, உம்மையே வேண்டுகிறேன், காலையில் என் குரலைக் கேட்டருள்வீர்: காலையில் என் மன்றாட்டுகளை உம்மிடம் எடுத்துச் சொல்லி, உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.
|
7. நானோ உம் திருவருளின் பெருக்கத்திற்கேற்ப உம் இல்லத்தில் சென்றிடுவேன்: உமது புனித ஆலயத்தில், ஆண்டவரே, உம்மை அஞ்சித் தொழுதிடுவேன்.
|
8. என் மாற்றாரின் பொருட்டு உம் நீதியைக் காட்டி வழி நடத்தும்: உமது செவ்வையான வழியை எனக்குக் காட்டியருளும்.
|
9. ஏனென்றால், அவர்கள் நாவில் நேர்மை என்பதில்லை; அவர்கள் இதயத்தில் உள்ளதெல்லாம் வஞ்சகமே: அவர்களுடைய தெண்டை திறந்த கல்லறையாகும்; நாவினால் முகமன் கூறுகின்றனர்.
|
10. இறைவா, அவர்களைத் தண்டியும்; தங்கள் திட்டங்களாலேயே அவர்கள் அழிவுறைவார்களாக: அவர்கள் செய்த பல தீவினைகளை முன்னிட்டு அவர்களை விரட்டி விடும்; ஏனெனில், உமக்கு எதிராகவே கலகம் செய்தனர்.
|
11. உம் அடைக்கலம் நாடி வருவோர் அனைவரும் அகமகிழ்வார்களாக என்றென்றும் அக்களிப்பார்களாக: உமது பெயர் மீது அன்பு வைத்தவர்களைப் பாதுகாப்பீராக; அவர்கள் உம்மை நினைத்து மகிழ்ச்சியுறுவார்களாக.
|