2. அவர் தம் மலை புனிதமானது, புகழ்மிக்கது, உலகனைத்திற்கும் மகிழ்ச்சியாய் விளங்குவது சீயோன் மலை வட கோடியில் உள்ளது; பேரரசரின் நகரம் அதுவே.
|
7. தார்சிஸ் நாட்டுக்குச் செல்லும் கப்பல்களைக் கீழ்த்திசைக் காற்று தாக்கும் போது உண்டாகும் அச்சத்தைப் போன்றது அது.
|
8. நாங்கள் கேள்வியுற்றது போலவே இருக்கக் கண்டோம், வான் படைகளுக்கு ஆண்டவராயுள்ளவரது நகரில் நிகழக்கண்டோம்: நம் இறைவனின் நகரில் கண்டோம், கடவுள் அதை என்றென்றைக்கும் நிலை நிறுத்துகிறார்.
|
10. இறைவா, உமது பெயரைப்போலவே உமது புகழும் பூமியின் கடையெல்லை வரை எட்டுகின்றது; உமது வலக்கரம் நீதியால் நிரம்பியுள்ளது.
|
13. அதன் மதில் அரண்களை உற்றுப் பாருங்கள்; அதன் கோட்டைகளை ஆய்ந்து பாருங்கள்: அப்போது இனி வரும் தலைமுறையை நேக்கிச் சொல்வீர்கள்:
|
14. கடவுள் எவ்வளவு மேலானவர்! என்றென்றும் முடிவில்லாக் காலத்துக்கும் அவரே நம் கடவுள்: அவரே நம்மை வழி நடத்துவார்' என்பீர்கள்.
|