தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. மக்களினத்தாரே, நீங்கள் யாவரும் கைகொட்டுங்கள்: அக்களிப்போடு இறைவனுக்குப் புகழ் பாடி ஆர்ப்பரியுங்கள்.
2. ஏனெனில், ஆண்டவர் உன்னதமானவர், அஞ்சுதற்குரியவர்: உலகுக்கெல்லாம் பேரரசர்.
3. மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார்: நாடுகளை நமக்கு அடிபணிய வைத்தார்.
4. நமக்கு உரிமைப் பொருளாக நாட்டைத் தேடித் தந்தார்: தாம் அன்பு செய்யும் யாக்கோபுக்கு அது பெருமை தருவதாகும்.
5. மக்கள் ஆர்ப்பரிக்க இறைவன் அரியணை ஏறுகிறார்: எக்காளம் முழங்க ஆண்டவர் எழுந்தருளுகிறார்.
6. பாடுங்கள், இறைவனுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் வேந்தனுக்குப் புகழ் பாடுங்கள்.
7. ஏனெனில் கடவுள் உலகுக்கெல்லாம் அரசர்: அவருக்கு இன்னிசை எழுப்புங்கள்.
8. நாடுகள் அனைத்தின் மீதும் இறைவன் ஆட்சி புரிகின்றார். தம் புனித அரியணை மீது இறைவன் வீற்றிருக்கின்றார்.
9. ஆபிரகாமின் இறைவனுடைய மக்களோடு புறவினத்தாரின் தலைவர்கள் கூடியிருக்கின்றனர்: ஏனெனில் உலகின் தலைவர்களெல்லாம் இறைவனுக்குரியவர்கள்; அவரே மிக உன்னதமானவர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 47 of Total Chapters 150
சங்கீதம் 47:23
1. மக்களினத்தாரே, நீங்கள் யாவரும் கைகொட்டுங்கள்: அக்களிப்போடு இறைவனுக்குப் புகழ் பாடி ஆர்ப்பரியுங்கள்.
2. ஏனெனில், ஆண்டவர் உன்னதமானவர், அஞ்சுதற்குரியவர்: உலகுக்கெல்லாம் பேரரசர்.
3. மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார்: நாடுகளை நமக்கு அடிபணிய வைத்தார்.
4. நமக்கு உரிமைப் பொருளாக நாட்டைத் தேடித் தந்தார்: தாம் அன்பு செய்யும் யாக்கோபுக்கு அது பெருமை தருவதாகும்.
5. மக்கள் ஆர்ப்பரிக்க இறைவன் அரியணை ஏறுகிறார்: எக்காளம் முழங்க ஆண்டவர் எழுந்தருளுகிறார்.
6. பாடுங்கள், இறைவனுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் வேந்தனுக்குப் புகழ் பாடுங்கள்.
7. ஏனெனில் கடவுள் உலகுக்கெல்லாம் அரசர்: அவருக்கு இன்னிசை எழுப்புங்கள்.
8. நாடுகள் அனைத்தின் மீதும் இறைவன் ஆட்சி புரிகின்றார். தம் புனித அரியணை மீது இறைவன் வீற்றிருக்கின்றார்.
9. ஆபிரகாமின் இறைவனுடைய மக்களோடு புறவினத்தாரின் தலைவர்கள் கூடியிருக்கின்றனர்: ஏனெனில் உலகின் தலைவர்களெல்லாம் இறைவனுக்குரியவர்கள்; அவரே மிக உன்னதமானவர்.
Total 150 Chapters, Current Chapter 47 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References