1. மக்களினத்தாரே, நீங்கள் யாவரும் கைகொட்டுங்கள்: அக்களிப்போடு இறைவனுக்குப் புகழ் பாடி ஆர்ப்பரியுங்கள்.
|
4. நமக்கு உரிமைப் பொருளாக நாட்டைத் தேடித் தந்தார்: தாம் அன்பு செய்யும் யாக்கோபுக்கு அது பெருமை தருவதாகும்.
|
8. நாடுகள் அனைத்தின் மீதும் இறைவன் ஆட்சி புரிகின்றார். தம் புனித அரியணை மீது இறைவன் வீற்றிருக்கின்றார்.
|
9. ஆபிரகாமின் இறைவனுடைய மக்களோடு புறவினத்தாரின் தலைவர்கள் கூடியிருக்கின்றனர்: ஏனெனில் உலகின் தலைவர்களெல்லாம் இறைவனுக்குரியவர்கள்; அவரே மிக உன்னதமானவர்.
|