1. இனிய கருத்தொன்றைப் பேச என் நெஞ்சம் துடிக்கிறது, என் பாடலை நான் அரசரிடம் கூறுகிறேன்: தயங்காமல் எழுதுவோனின் எழுது கோல் போலுள்ளது என் நாவு
|
2. மனுமக்கள் அனைவரிலும் நீர் எழில் மிக்கவர்; உம் பேச்சில் அருள் விளங்கும்: ஆகவே கடவுள் உம்மை என்றென்றும் ஆசீர்வதித்தார்.
|
7. நீதியை விரும்புகின்றீர், அக்கிரமத்தை வெறுக்கின்றீர்: ஆகவே கடவுள், உம் கடவுள் உம் தோழர்களை விட மேலாக உம்மை மகிழ்ச்சித் தைலத்தால் அபிஷுகம் செய்தார்.
|
8. நீர் அணிந்துள்ள ஆடைகளில் வெள்ளைப் போளம், சந்தனம், இலவங்கத்தின் நறுமணம் வீசுகின்றது: தந்த மாளிகையினின்று எழும் யாழின் ஓசை உமக்கு மகிழ்ச்சியூட்டுகிறது.
|
9. அரசிளம் பெண்கள் உம்மை எதிர்கொண்டு வரவேற்கின்றனர்: ஒபீர் தங்க அணிகள் அணிந்து உம் அரசி உம் வலப்புறம் நிற்கிறார்.
|
10. மகளே, நான் சொல்வது கேள். நினைத்துப் பார், இதற்குச் செவிசாய்: உன் இனத்தாரையும் வீட்டாரையும் மறந்து விடு.
|
14. பன்னிற ஆடையை அணிந்தவளாய் அவள் அரசரிடம் அழைத்து வரப்படுகின்றாள்: இளத்தோழியரும் அவளோடு உம்மிடம் வருகின்றனர்.
|
15. மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்: அரச மாளிகையில் அவர்கள் இதோ நுழைகின்றனர்.
|
16. உன் முன்னோருக்குப் பதிலாக உனக்குப் புதல்வர்கள் இருப்பர்: மாநிலமனைத்திற்கும் அவர்களை நீ தலைவர்களாக்குவாய்.
|
17. தலைமுறை தலைமுறையாய் உமது பெயரை நான் நினைவு கூர்வேன், என்றென்றும் மக்களினத்தார் உம்மைக் கொண்டாடுவர்.
|