1. நாவினால் பாவம் செய்யாதவாறு என் போக்கைக் கவனித்துக் கொள்வேன்: தீயவன் என் எதிரில் இருக்கும் வரையில் என் வாய்க்குக் கடிவாளம் இடுவேன்" என்றேன்.
|
3. என் உள்ளம் என் அகத்தே எரிச்சல் கொண்டது: நினைக்க நினைக்கப் பற்றி எரிந்தது, அப்போது என் நா பேசியதாவது.
|
5. எவ்வளவு நிலையற்றது என் வாழ்வு' இதை அறிவேனாக. (6) இதோ! என் வாழ்நாள் இரண்டொரு கைமுழம் போல இருக்கச் செய்தீர்: உம்முன்னே என் வாழ்க்கை ஒன்றுமேயில்லை; எம் மனிதனும் ஒரு சிறு மூச்சுப் போல் இருக்கின்றான்.
|
6. (7) வெறும் நிழலைப் போல கடந்து போகிறான் எம்மனிதனும்; அவன் கலக்கப்படுவதெல்லாம் வீணே: பொருளைச் சேர்க்கிறான், ஆனால் யார் அதை அடைவர் என அறியான்.
|
10. (11) நீரெனக்கு அனுப்பிய வாதையை என்னிடமிருந்து அகற்றிவிடும்: உமது கரத்தின் தாகுதலால் நான் நிலை குலைந்து போகிறேன்.
|
11. (12) குற்றத்தின் பொருட்டே நீர் ஒருவனைத் தண்டிக்கிறீர்: அவன் விரும்பும் பொருளையெல்லாம் அரிப்பது போல அழித்து விடுகிறீர்; மனிதன் ஒரு சிறு மூச்சேயன்றோ!
|
12. (13) ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்: என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்; என் கண்ணீருக்குப் பாராமுகமாயிராதேயும். உம் முன்னிலையில் நான் அந்நியனாயுள்ளேன்: என் முன்னோர் அனைவர் போல நானும் வழிப்போக்கனே.
|
13. (14) நான் போய் விடு முன்பே, உலகிலிருந்து மறையு முன்பே, உம் கோபப் பார்வையை என்னிடமிருந்து திருப்பி, நான் அமைதியிலேயே உயிர் வாழச் செய்யும்.'
|