3. நீர் சினங்கொண்டதால் என் உடலில் நலமே இல்லை: என் பாவத்தால் என் எலும்புகளெல்லாம் நெக்குவிட்டுப் போயின.
|
11. என் நண்பர், என் தோழர் எல்லாருமே என் துன்ப நேரத்தில் தொலைவில் நின்றார்கள்: என் உறவினரும் என்னை அணுகவில்லை.
|
12. என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் எனக்குக் கண்ணி வைக்கின்றனர்: எனக்குத் தீமை செய்ய விரும்புவோர், கேடு வருமென அச்சுறுத்துகின்றனர்; எப்போதும் எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்கின்றனர்.
|
15. ஆண்டவரே, என் நம்பிக்கை எல்லாம் உம்மீதே வைத்திருக்கிறேன்: ஆண்டவராகிய என் இறைவா, என் மன்றாட்டை நீர் கேட்டருள்வீர்.
|
16. என் அடி சறுக்கும் போது, என்னைப் பார்த்து மகிழ்ச்சியுற விடாதீர்: எனக்கெதிராய் பெருமை கொள்ள விடாதீர்" என்று வேண்டுகிறேன்.
|
18. என் குற்றத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்: நான் செய்த பாவத்தினிமித்தம் நான் பெரிதும் கவலையுற்றிருக்கிறேன்.
|