தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. தீமை செய்பவர்களைக் கண் எரிச்சல் கொள்ளாதே: அக்கிரமம் செய்வோரைப் பார்த்துப் பொறாமைப் படாதே.
2. ஏனென்றால், அவர்கள் விரைவில் புல்லைப் போல் உலர்ந்து போவார்கள்: புற்பூண்டுகளைப் போல வாடிப் போவார்கள்.
3. ஆண்டவர் மீது நம்பிக்கை வை, நன்மை செய்: புனித நாட்டில் எவ்விதக் கவலையின்றி இருப்பாய்.
4. ஆண்டவரில் உன் இன்பத்தைத் தேடு: அப்போது உன் நெஞ்சம் நாடுவதை அவர் உனக்குத் தருவார்.
5. உன் வாழ்வின் முடிவை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவர் பேரில் நம்பிக்கை வைத்திரு: அவரே எல்லாம் செய்வார்.
6. உனது நேர்மை ஒளிபோல எழும்பச் செய்வார்: உனது மாசின்மை பட்டப்பகல் போல விளங்கச் செய்வார்.
7. ஆண்டவரில் மன அமைதிகொள்; அவரில் நம்பிக்கை வை: தான் செய்பவற்றில் வெற்றி பெறுபவனைப் பார்த்துப் பொறாமை கொள்ளாதே; அநீதி செய்யத் திட்டமிடுகிறவனையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே.
8. கோபத்தை விட்டு விடு; சினத்தைக் கைவிடு: எரிச்சல்படாதே; அதுவே பாவத்திற்கு வழியாகும்.
9. ஏனென்றால், தீமை செய்வோர் நாசமாவார்கள்: ஆனால் ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவர்கள் புனித நாட்டை உரிமையாக்கிக் கொள்வார்கள்.
10. இன்னும் சிறிதுகாலம்; தீயவன் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்துபோவான்: அவன் இருந்த இடத்தைத் தேடுவாய்; ஆனால், அவன் அங்கு இருக்கமாட்டான்.
11. சாந்தமுள்ளோர் புனித நாட்டை உரிமைப்படுத்திக் கொள்வார்கள்: அவர்கள் மிகுந்த அமைதியில் இன்பம் காண்பர்.
12. நீதிமானுக்கு விரோதமாகப் பாவி சதித்திட்டமிடுகிறான்: அவனைப் பார்த்துப் பல்லைக் கடிக்கிறான்.
13. ஆண்டவரோ அவனைப் பார்த்து நகைக்கிறார்: அவனது அழிவுக்காலம் நெருங்குவதை அவர் காண்கிறார்.
14. ஏழை எளியவரை விழத்தாட்டி, நேரிய பாதையில் நடப்பவர்களைத் தொலைக்க, தீயோர் பட்டயத்தை உருவுகின்றனர்: வில்லை நாணேற்றுகிறார்கள்.
15. ஆனால் அவர்களது பட்டயம் அவர்கள் நெஞ்சிலேயே பாயும்: அவர்கள் வில்லும் ஒடிந்து போகும்.
16. தீயோருடைய திரளான செல்வத்தை விட, நல்லவருடைய சிறிதளவு பொருள் மேலானது.
17. ஏனெனில், பாவிகளின் வலிமை நிலைகுலைந்து போகும்: ஆண்டவர் நீதிமான்களை நிலை நிறுத்துவார்.
18. நீதிமான்களுடைய வாழ்நாட்களைக் குறித்து ஆண்டவர் கருத்தாய் இருக்கிறார்: அவர்கள் உரிமைச் சொத்து என்றென்றும் நிற்கும்.
19. அழிவின் காலத்தில் அவர்கள் வெட்கிப் போக மாட்டார்கள்: பஞ்ச காலத்திலோ அவர்கள் நிறைவு கொள்வார்கள்.
20. ஆனால் தீயோர் அழிவுறுவர்; ஆண்டவருடைய எதிரிகள் செழிப்பான புல்வெளி உலர்வது போல் ஒழிந்துபோவர்: புகை போல் மறைந்தொழிவர்.
21. தீயோர் கடன் வாங்கினால், திருப்பிக் கொடுப்பதில்லை: நல்லவரோ மனமிரங்கிப் பிறருக்குக் கொடுப்பர்.
22. ஆண்டவர் யாருக்குத் தம் ஆசியை அருள்கிறாரோ அவர்கள் புனித நாட்டை உரிமையாக்கிக்கொள்வர்: யாரைச் சபிக்கிறாரோ அவர்கள் அழிந்து போவார்.
23. ஒருவனுடைய வாழ்வின் நெறி உறுதி பெறுவது ஆண்டவராலே: அவனுடைய வாழ்வை அவர் உகந்ததென ஏற்கிறார்.
24. அப்போது அவன் கீழே விழுந்தாலும் அப்படியே குப்புறக் கிடக்கமாட்டான்: ஏனெனில் ஆண்டவர் அவனது கையைத் தாங்கிக் கொள்கிறார்.
25. இளைஞனாய் இருந்திருக்கிறேன்; இதோ முதிர் பருவம் அடைந்துள்ளேன்: நல்லவன் கைவிடப்பட்டதை நான் எந்நாளும் கண்டதில்லை; அவனுடைய மக்கள் பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை.
26. எப்போதும் அவன் இரக்கப்படுகிறான், கடன் கொடுக்கிறான்: ஆகவே அவன் மக்கள் ஆசி பெறுவர்.
27. தீமையை விலக்கு, நன்மை செய்: அப்போது என்றென்றும் வாழ்வாய்.
28. ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகிறார், தம் புனிதர்களை அவர் கைவிடுவதில்லை: நெறிகெட்டவர் அழிவுறுவர், அவர்கள் மக்கள் வேரோடு ஒழிந்து போவர்.
29. நல்லவர்களோ புனித நாட்டை உரிமையாக்கிக்கொள்வர்: என்றென்றும் அதில் வாழ்வர்.
30. நீதிமானின் வாயிலிருந்து ஞானம் வெளிப்படும்: அவனது நாவு நேரியதை எடுத்துரைக்கும்.
31. கடவுளுடைய திருச்சட்டம் அவன் நெஞ்சில் பதிந்துள்ளது: அவனுடைய பாதங்கள் தடுமாறுவதில்லை.
32. தீயவன் நீதிமான் மேலேயே கண்ணாயிருக்கிறான்: அவனைக் கொன்றுவிடப் பார்க்கிறான்.
33. ஆனால் ஆண்டவர் அவனைத் தீயவனின் கையில் சிக்கவிட மாட்டார்: நியாயத் தீர்ப்பு நிகழும் போது தண்டனைகளாக விட மாட்டார்.
34. ஆண்டவர் மீது நம்பிக்கை வை; அவர் காட்டிய வழியில் நட: அப்போது நீ புனித நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும்படி உன்னை உயர்த்துவார்; தீயோர் அழிவுறுவதைப் பார்த்து மகிழ்வாய்.
35. தீயவன் செருக்கித் திரிவதை நான் பார்த்தேன்: செழித்தோங்கும் கேதுரு மரம் போல் சிறந்தோங்குவதைக் கண்டேன்.
36. அவ்வழியே மீண்டும் சென்றேன்; அவன் இருக்கிற இடம் தெரியவில்லை: தேடிப் பார்த்தேன், காணவில்லை.
37. நல்லவனைக் கவனித்துப் பார்; நீதிமானை எண்ணிப் பார்: அமைதியை விரும்புகிறவனுக்கு சந்ததியிராமல் போகாது.
38. பாவிகள் அனைவரும் வேரோடு களையப்படுவார்: தீயோரின் சந்ததி அகற்றப்படும்.
39. நல்லவர்களுக்கு ஈடேற்றம் ஆண்டவரிடமிருந்தே வரும்: துன்ப வேளையில் அவர்களுக்குப் புகலிடம் அவரே.
40. ஆண்டவர் அவர்களுக்குத் துணை நின்று விடுதலையளிக்கிறார்; தீயோரின் கையினின்று விடுவித்துக் காப்பாற்றுகிறார்: ஏனெனில், அவர்கள் அவரிடம் அடைக்கலம் தேடுகின்றனர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 37 of Total Chapters 150
சங்கீதம் 37:107
1. தீமை செய்பவர்களைக் கண் எரிச்சல் கொள்ளாதே: அக்கிரமம் செய்வோரைப் பார்த்துப் பொறாமைப் படாதே.
2. ஏனென்றால், அவர்கள் விரைவில் புல்லைப் போல் உலர்ந்து போவார்கள்: புற்பூண்டுகளைப் போல வாடிப் போவார்கள்.
3. ஆண்டவர் மீது நம்பிக்கை வை, நன்மை செய்: புனித நாட்டில் எவ்விதக் கவலையின்றி இருப்பாய்.
4. ஆண்டவரில் உன் இன்பத்தைத் தேடு: அப்போது உன் நெஞ்சம் நாடுவதை அவர் உனக்குத் தருவார்.
5. உன் வாழ்வின் முடிவை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவர் பேரில் நம்பிக்கை வைத்திரு: அவரே எல்லாம் செய்வார்.
6. உனது நேர்மை ஒளிபோல எழும்பச் செய்வார்: உனது மாசின்மை பட்டப்பகல் போல விளங்கச் செய்வார்.
7. ஆண்டவரில் மன அமைதிகொள்; அவரில் நம்பிக்கை வை: தான் செய்பவற்றில் வெற்றி பெறுபவனைப் பார்த்துப் பொறாமை கொள்ளாதே; அநீதி செய்யத் திட்டமிடுகிறவனையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே.
8. கோபத்தை விட்டு விடு; சினத்தைக் கைவிடு: எரிச்சல்படாதே; அதுவே பாவத்திற்கு வழியாகும்.
9. ஏனென்றால், தீமை செய்வோர் நாசமாவார்கள்: ஆனால் ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவர்கள் புனித நாட்டை உரிமையாக்கிக் கொள்வார்கள்.
10. இன்னும் சிறிதுகாலம்; தீயவன் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்துபோவான்: அவன் இருந்த இடத்தைத் தேடுவாய்; ஆனால், அவன் அங்கு இருக்கமாட்டான்.
11. சாந்தமுள்ளோர் புனித நாட்டை உரிமைப்படுத்திக் கொள்வார்கள்: அவர்கள் மிகுந்த அமைதியில் இன்பம் காண்பர்.
12. நீதிமானுக்கு விரோதமாகப் பாவி சதித்திட்டமிடுகிறான்: அவனைப் பார்த்துப் பல்லைக் கடிக்கிறான்.
13. ஆண்டவரோ அவனைப் பார்த்து நகைக்கிறார்: அவனது அழிவுக்காலம் நெருங்குவதை அவர் காண்கிறார்.
14. ஏழை எளியவரை விழத்தாட்டி, நேரிய பாதையில் நடப்பவர்களைத் தொலைக்க, தீயோர் பட்டயத்தை உருவுகின்றனர்: வில்லை நாணேற்றுகிறார்கள்.
15. ஆனால் அவர்களது பட்டயம் அவர்கள் நெஞ்சிலேயே பாயும்: அவர்கள் வில்லும் ஒடிந்து போகும்.
16. தீயோருடைய திரளான செல்வத்தை விட, நல்லவருடைய சிறிதளவு பொருள் மேலானது.
17. ஏனெனில், பாவிகளின் வலிமை நிலைகுலைந்து போகும்: ஆண்டவர் நீதிமான்களை நிலை நிறுத்துவார்.
18. நீதிமான்களுடைய வாழ்நாட்களைக் குறித்து ஆண்டவர் கருத்தாய் இருக்கிறார்: அவர்கள் உரிமைச் சொத்து என்றென்றும் நிற்கும்.
19. அழிவின் காலத்தில் அவர்கள் வெட்கிப் போக மாட்டார்கள்: பஞ்ச காலத்திலோ அவர்கள் நிறைவு கொள்வார்கள்.
20. ஆனால் தீயோர் அழிவுறுவர்; ஆண்டவருடைய எதிரிகள் செழிப்பான புல்வெளி உலர்வது போல் ஒழிந்துபோவர்: புகை போல் மறைந்தொழிவர்.
21. தீயோர் கடன் வாங்கினால், திருப்பிக் கொடுப்பதில்லை: நல்லவரோ மனமிரங்கிப் பிறருக்குக் கொடுப்பர்.
22. ஆண்டவர் யாருக்குத் தம் ஆசியை அருள்கிறாரோ அவர்கள் புனித நாட்டை உரிமையாக்கிக்கொள்வர்: யாரைச் சபிக்கிறாரோ அவர்கள் அழிந்து போவார்.
23. ஒருவனுடைய வாழ்வின் நெறி உறுதி பெறுவது ஆண்டவராலே: அவனுடைய வாழ்வை அவர் உகந்ததென ஏற்கிறார்.
24. அப்போது அவன் கீழே விழுந்தாலும் அப்படியே குப்புறக் கிடக்கமாட்டான்: ஏனெனில் ஆண்டவர் அவனது கையைத் தாங்கிக் கொள்கிறார்.
25. இளைஞனாய் இருந்திருக்கிறேன்; இதோ முதிர் பருவம் அடைந்துள்ளேன்: நல்லவன் கைவிடப்பட்டதை நான் எந்நாளும் கண்டதில்லை; அவனுடைய மக்கள் பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை.
26. எப்போதும் அவன் இரக்கப்படுகிறான், கடன் கொடுக்கிறான்: ஆகவே அவன் மக்கள் ஆசி பெறுவர்.
27. தீமையை விலக்கு, நன்மை செய்: அப்போது என்றென்றும் வாழ்வாய்.
28. ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகிறார், தம் புனிதர்களை அவர் கைவிடுவதில்லை: நெறிகெட்டவர் அழிவுறுவர், அவர்கள் மக்கள் வேரோடு ஒழிந்து போவர்.
29. நல்லவர்களோ புனித நாட்டை உரிமையாக்கிக்கொள்வர்: என்றென்றும் அதில் வாழ்வர்.
30. நீதிமானின் வாயிலிருந்து ஞானம் வெளிப்படும்: அவனது நாவு நேரியதை எடுத்துரைக்கும்.
31. கடவுளுடைய திருச்சட்டம் அவன் நெஞ்சில் பதிந்துள்ளது: அவனுடைய பாதங்கள் தடுமாறுவதில்லை.
32. தீயவன் நீதிமான் மேலேயே கண்ணாயிருக்கிறான்: அவனைக் கொன்றுவிடப் பார்க்கிறான்.
33. ஆனால் ஆண்டவர் அவனைத் தீயவனின் கையில் சிக்கவிட மாட்டார்: நியாயத் தீர்ப்பு நிகழும் போது தண்டனைகளாக விட மாட்டார்.
34. ஆண்டவர் மீது நம்பிக்கை வை; அவர் காட்டிய வழியில் நட: அப்போது நீ புனித நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும்படி உன்னை உயர்த்துவார்; தீயோர் அழிவுறுவதைப் பார்த்து மகிழ்வாய்.
35. தீயவன் செருக்கித் திரிவதை நான் பார்த்தேன்: செழித்தோங்கும் கேதுரு மரம் போல் சிறந்தோங்குவதைக் கண்டேன்.
36. அவ்வழியே மீண்டும் சென்றேன்; அவன் இருக்கிற இடம் தெரியவில்லை: தேடிப் பார்த்தேன், காணவில்லை.
37. நல்லவனைக் கவனித்துப் பார்; நீதிமானை எண்ணிப் பார்: அமைதியை விரும்புகிறவனுக்கு சந்ததியிராமல் போகாது.
38. பாவிகள் அனைவரும் வேரோடு களையப்படுவார்: தீயோரின் சந்ததி அகற்றப்படும்.
39. நல்லவர்களுக்கு ஈடேற்றம் ஆண்டவரிடமிருந்தே வரும்: துன்ப வேளையில் அவர்களுக்குப் புகலிடம் அவரே.
40. ஆண்டவர் அவர்களுக்குத் துணை நின்று விடுதலையளிக்கிறார்; தீயோரின் கையினின்று விடுவித்துக் காப்பாற்றுகிறார்: ஏனெனில், அவர்கள் அவரிடம் அடைக்கலம் தேடுகின்றனர்.
Total 150 Chapters, Current Chapter 37 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References