4. தூங்கும் போது கூட அவன் நினைத்துக் கொண்டு இருப்பதெல்லாம் அக்கிரமமே: நெறிகெட்ட வழியில் அவன் நடக்கிறான்; தீய வழியை விட்டு அவன் விலகுவதில்லை.
|
6. உம்முடைய நீதி மிக உயர்ந்த மலைகள் போல உயர்ந்துள்ளன; உம் நியாயத் தீர்ப்புகள் அடி காணாத கடல் போல் ஆழ்ந்துள்ளன: ஆண்டவரே, மனிதர்களையும் விலங்குகளையும் நீர் காப்பாற்றுகிறீர்.
|
7. இறைவா, உமதருள் எவ்வளவு உயிர்மதிப்புள்ளது! மனுமக்கள் உம் இறக்கைகளின் நிழலில் வந்து அடைக்கலம் புகுகின்றனர்.
|
8. உமது வீட்டில் உள்ள செழுமையால் அவர்கள் நிறைவு கொள்கின்றனர்: உம் பேரின்ப நீரோடையில் அவர்களது தாகத்தைத் தணிக்கின்றீர்.
|
10. உம்மை வணங்குபவர்களுக்கு உமது இரக்கத்தையும், செம்மையான நெஞ்சினர்க்கு உமது நேர்மையையும் காண்பித்தருளும் .
|