தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. தீமையானது பாவியின் மனத்தைத் தூண்டுகிறது: அவன் மனக்கண் முன் இறை அச்சம் என்பதே இல்லை.
2. தன் குற்றம் வெளியாகாது, வெறுப்புக்குள்ளாகாது என்று நினைத்து வீண் நம்பிக்கை கொள்கிறான்.
3. அவன் பேசுவதெல்லாம் கொடுமையும் வஞ்சகமுமே: நல்லறிவு கொண்டு நன்மை செய்வதை நிறுத்தி விட்டான்.
4. தூங்கும் போது கூட அவன் நினைத்துக் கொண்டு இருப்பதெல்லாம் அக்கிரமமே: நெறிகெட்ட வழியில் அவன் நடக்கிறான்; தீய வழியை விட்டு அவன் விலகுவதில்லை.
5. ஆண்டவரே, உமது அருளன்பு வானங்கள் வரைக்கும் உயர்ந்துள்ளது: உமது சொல்லுறுதி மேகங்களையே எட்டுகிறது.
6. உம்முடைய நீதி மிக உயர்ந்த மலைகள் போல உயர்ந்துள்ளன; உம் நியாயத் தீர்ப்புகள் அடி காணாத கடல் போல் ஆழ்ந்துள்ளன: ஆண்டவரே, மனிதர்களையும் விலங்குகளையும் நீர் காப்பாற்றுகிறீர்.
7. இறைவா, உமதருள் எவ்வளவு உயிர்மதிப்புள்ளது! மனுமக்கள் உம் இறக்கைகளின் நிழலில் வந்து அடைக்கலம் புகுகின்றனர்.
8. உமது வீட்டில் உள்ள செழுமையால் அவர்கள் நிறைவு கொள்கின்றனர்: உம் பேரின்ப நீரோடையில் அவர்களது தாகத்தைத் தணிக்கின்றீர்.
9. ஏனெனில், உயிர்தரும் ஊற்று உம்மிடமே உள்ளது: உமது ஒளியிலே நாங்கள் ஒளி காண்போம்.
10. உம்மை வணங்குபவர்களுக்கு உமது இரக்கத்தையும், செம்மையான நெஞ்சினர்க்கு உமது நேர்மையையும் காண்பித்தருளும் .
11. செருக்குள்ளவன் என்னை நசுக்க விடாதேயும்: பாவியின் கையில் நான் அகப்பட விடாதேயும்.
12. தீமை செய்தவர்கள் இதோ அழிந்து போயினர், வீழ்த்தப்பட்டார்கள்: அவர்கள் மீண்டும் எழப்போவதில்லை.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 36 of Total Chapters 150
சங்கீதம் 36:104
1. தீமையானது பாவியின் மனத்தைத் தூண்டுகிறது: அவன் மனக்கண் முன் இறை அச்சம் என்பதே இல்லை.
2. தன் குற்றம் வெளியாகாது, வெறுப்புக்குள்ளாகாது என்று நினைத்து வீண் நம்பிக்கை கொள்கிறான்.
3. அவன் பேசுவதெல்லாம் கொடுமையும் வஞ்சகமுமே: நல்லறிவு கொண்டு நன்மை செய்வதை நிறுத்தி விட்டான்.
4. தூங்கும் போது கூட அவன் நினைத்துக் கொண்டு இருப்பதெல்லாம் அக்கிரமமே: நெறிகெட்ட வழியில் அவன் நடக்கிறான்; தீய வழியை விட்டு அவன் விலகுவதில்லை.
5. ஆண்டவரே, உமது அருளன்பு வானங்கள் வரைக்கும் உயர்ந்துள்ளது: உமது சொல்லுறுதி மேகங்களையே எட்டுகிறது.
6. உம்முடைய நீதி மிக உயர்ந்த மலைகள் போல உயர்ந்துள்ளன; உம் நியாயத் தீர்ப்புகள் அடி காணாத கடல் போல் ஆழ்ந்துள்ளன: ஆண்டவரே, மனிதர்களையும் விலங்குகளையும் நீர் காப்பாற்றுகிறீர்.
7. இறைவா, உமதருள் எவ்வளவு உயிர்மதிப்புள்ளது! மனுமக்கள் உம் இறக்கைகளின் நிழலில் வந்து அடைக்கலம் புகுகின்றனர்.
8. உமது வீட்டில் உள்ள செழுமையால் அவர்கள் நிறைவு கொள்கின்றனர்: உம் பேரின்ப நீரோடையில் அவர்களது தாகத்தைத் தணிக்கின்றீர்.
9. ஏனெனில், உயிர்தரும் ஊற்று உம்மிடமே உள்ளது: உமது ஒளியிலே நாங்கள் ஒளி காண்போம்.
10. உம்மை வணங்குபவர்களுக்கு உமது இரக்கத்தையும், செம்மையான நெஞ்சினர்க்கு உமது நேர்மையையும் காண்பித்தருளும் .
11. செருக்குள்ளவன் என்னை நசுக்க விடாதேயும்: பாவியின் கையில் நான் அகப்பட விடாதேயும்.
12. தீமை செய்தவர்கள் இதோ அழிந்து போயினர், வீழ்த்தப்பட்டார்கள்: அவர்கள் மீண்டும் எழப்போவதில்லை.
Total 150 Chapters, Current Chapter 36 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References