1. ஆண்டவரே, என்னோடு வழக்காடுபவனுடன் நீர் வழக்குத் தொடுத்தருளும்: என்னைத் தாக்குபவன் மீது நீரே போர் தொடுத்தருளும்.
|
3. உம் கையில் ஈட்டியை ஓங்கி என்னைத் துண்புறுத்துவோரை வழிமறித்தருளும்: 'உன் பாதுகாப்பு நாமே' என்று என்னிடம் சொல்லியருளும்.
|
4. என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் ஏமாற்றமடைவார்களாக, வெட்கமுறுவார்களாக: எனக்குத் தீமை செய்ய நினைப்போர் பின்னடைவார்களாக, நாணித் தலை குனிவார்களாக.
|
6. ஆண்டவருடைய தூதர் அவர்களைத் துரத்திச் செல்ல, அவர்கள் செல்லும் வழி இருள் மிக்கதும் வழுக்கலுமாயிருப்பதாக.
|
7. ஏனெனில், காரணம் எதுவுமின்றி எனக்கு அவர்கள் கண்ணி வைத்தார்கள்: காரணமின்றி அவர்கள் என் உயிரை வாங்கப் படுகுழி வெட்டினார்கள்.
|
8. எதிர்பாராத அழிவு அவர்களுக்கு வருவதாக, அவர்கள் விரித்த வலையில் அவர்களே பிடிபடுவார்களாக: அவர்கள் வெட்டிய குழியில் அவர்களே விழுவார்களாக.
|
10. எனக்குள்ள வலிமையெல்லாம்: 'ஆண்டவரே உமக்கு இணை யார்? வலிமை மிக்கவனிடமிருந்து எளியவனை விடுவிக்கும் உமக்கு, கொள்ளையடிப்பவனிடமிருந்து துயருற்றவனையும் ஏழையையும் காக்கும் உமக்கு இணை யார்?' என்கிறது.
|
11. வன்னெஞ்சச் காட்சிகள் எழுந்தனர்: என்ன வென்றும் அறியாத காரியங்களைப் பற்றி என்னிடம் கேள்வி கேட்டனர்.
|
12. நான் செய்த நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமையே செய்தனர்: என் நெஞ்சம் ஆழ்துயரில் அமிழ்ந்தச் செய்தனர்.
|
13. நனோ அவர்கள் நோயுற்றிருக்கையில் சாக்குத்துணி அணிந்து, நோன்பிருந்து என்னை வாட்டிக் கொண்டேன்: என்னுள்ளே வெகுவாய்ச் செபம் செய்தேன்.
|
14. அவனை என் நண்பன், என் சகோதரன் போல் நினைத்துத் துயர் கொண்டேன்: தன் தாயை நினைத்துத் துயருறுபவன் போல் துயர் கொண்டு அலைந்தேன்.
|
15. ஆனால் நான் தளர்ச்சியுற்றபோது அவர்கள் ஒன்று கூடி மகிழ்ந்தனர்: எதிர்பாராத நேரத்தில் எனக்கெதிராய் ஒன்று கூடி என் மேல் பாய்ந்தார்கள்.
|
16. ஓயாமல் என் மேல் பழி சுமத்தினார்கள்; சோதனைக்குள்ளாக்கினார்கள்; ஏளனத்துக்கு உட்படுத்தினார்கள்: பல்லைக் கடித்து கொண்டு என் மீது விழுந்தார்கள்.
|
17. ஆண்டவரே எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? கர்ஜனை செய்து தாக்குவோரிடமிருந்து, சிங்கங்களிடமிருந்து என் உயிரைக் காத்தருளும்.
|
19. வஞ்சகரான என் எதிரிகள் என் மீது வெற்றி கொண்டு மகிழ விடாதேயும்: காரணமின்றி என்னைப் பகைப்பவர் கண் சிமிட்ட விடாதேயும்.
|
20. அவர்கள் பேசுவது அமைதிப் பேச்சன்று: நாட்டில் அமைதியுடன் வாழ்வோருக்கு, வஞ்சகமாய்க் கெடுதி செய்வதே அவர்கள் நினைவெல்லாம்.
|
21. என்னை எதிர்த்து அவர்கள் தம் வாயை அகலத் திறக்கின்றனர்: 'ஆ, ஆ, எங்கள் கண்ணாலேயே பார்த்தோமே' என்கின்றனர்.
|
22. ஆண்டவரே, நீர் இதைப் பார்த்தீரன்றோ: பேசாமலிராதேயும் ஆண்டவரே, என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்.
|
23. என் இறைவா, என் ஆண்டவரே, என் வழக்கைத் தீர்க்க எழுந்து வாரும்: எனக்குப் பாதுகாப்பளிக்க விழித்தெழும்.
|
24. ஆண்டவரே, உம் நீதிக்கேற்ப என் வழக்கைத் தீர்த்தருளும்: என் இறைவா, அவர்கள் என் மேல் வெற்றி கொண்டு மகிழ்ச்சியுற விடாதேயும்.
|
25. ஆ, ஆ, நாம் விரும்பியது போலாயிற்று' என்று அவர்கள் தம் உள்ளத்தில் நினைக்கவிடாதேயும்: 'அவனை விழுங்கி விட்டோம்' என்று அவர்கள் சொல்ல விடாதேயும்.
|
26. எனக்கு நேர்ந்த இடர்களை நினைத்து மகிழ்ச்சியுறும் அவர்களனைவரும், ஒன்றாய்க் கலங்கி வெட்கமுறுவார்களாக.
|
27. எனக்கு எதிராகத் தலைதூக்குபவர்கள், வெட்கமும் மானக்கேடும் அடைவார்களாக; எனக்குச் சார்பாய்ப் பேசுபவர்கள் அக்களித்து அகமகிழ்வார்களாக: 'தம் ஊழியனின் நலத்தைக் காக்கும் ஆண்டவரது பெருமை விளங்கட்டும்' என்று எப்பொதும் சொல்வார்களாக.
|