7. குடத்தில் தண்ணீர் எடுப்பது போல் அவர் கடல் நீரை ஒன்றுசேர்க்கிறார்: பாத்திரங்களில் தண்ணீரை வைப்பது போல் ஆழ்கடலை அடைத்து வைத்திருக்கிறார்.
|
11. ஆண்டவருடைய திட்டங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்: அவருடைய எண்ணங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.
|
12. ஆண்டவரைத் தம் கடவுளாகக் கொள்ளும் மக்கள் இனம் பேறு பெற்றது: தமது உரிமைப் பொருளாக அவர் தேர்ந்தெடுத்த மக்கள் பேறு பெற்றவர்கள்.
|
16. அரசன் வெற்றி பெறுவது பெரிய சேனையினால் அன்று: போர் வீரன் தன்னைக் காத்துக் கொள்வது மிகுந்த வன்மையினால் அன்று.
|
19. அவர்களைச் சாவினின்று விடுவிக்கவும், பஞ்ச காலத்தில் அவர்களுக்கு உணவு கொடுக்கவுமே அவர் பார்க்கிறார்.
|
22. ஆண்டவரே, உம் இரக்கம் எம்மீது இருப்பதாக: நாங்கள் உம்மை நம்பியிருக்கும் அளவுக்கு உம் இரக்கமும் இருப்பதாக.
|