1. ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன், நான் ஒருநாளும் ஏமாற்றம் அடைய விடாதேயும்: உம்முடைய நீதியின்படி என்னை விடுவித்தருளும்.
|
2. என் பக்கம் செவிசாய்த்தருளும், என்னை விடுவிக்க விரைந்தருளும்; எனக்கு அடைக்கலந்தரும் பாறையாயிரும்: கோட்டை போலிருந்து என்னைக் காப்பாற்றும்.
|
3. ஏனெனில், நீர் எனக்குக் கற்கோட்டையாகவும் அரணாகவும் இருக்கின்றீர்: உம் பெயரின் பொருட்டு என்னை வழி நடத்தியருள்வீர், நல்வழி காட்டுவீர்.
|
4. என்னைப் பிடிக்க மறைவாக விரித்துள்ள கண்ணியினின்று என்னைத் தப்புவித்தருள்வீர்: ஏனெனில், நீர் எனக்கு அடைக்கலமாயுள்ளீர்.
|
5. உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்: ஆண்டவரே, வார்த்தையில் தவறாத இறைவா, நீர் என்னை மீட்டருள்வீர்.
|
7. உம் அருளன்பை நினைத்து நான் அகமகிழ்ந்து அக்களிப்பேன்: ஏனெனில், துயர் மிக்க என் நிலையப் பார்த்து என் நெருக்கடியில் எனக்கு உதவி செய்தீர்.
|
8. எதிரியின் கையில் என்னை நீர் விட்டுவிடவில்லை: எதிரியின் நெருக்கடியில்லாத இடத்தில் என்னை நிலை நிறுத்தினீர்.
|
9. ஆண்டவரே, என் மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நான் துன்ப நெருக்கடியில் அகப்பட்டிருக்கிறேன்: என் கண்கள் வருத்தத்தால் பலவீனமடைகின்றன, என் உயிரும் உடலும் அப்படியே.
|
10. வருத்ததிலேயே என் வாழ்நாள் கடந்துசெல்கின்றது; பெருமூச்சு விடுதலே என் வாழ்க்கையாயிருக்கின்றது: துயரத்தால் என் வலிமை குறைந்து போகின்றது, என் எலும்புகளும் தேய்ந்து போகின்றன.
|
11. என் எதிரிகள் அனைவருடையவும் பழிச்சொல்லுக்கு நான் ஆளானேன்; என் அயலாரின் நகைப்புக்கு இலக்கானேன்: எனக்கு அறிமுகமானவர்களின் அச்சத்துக்குரியவனானேன்; வெளியே என்னைக் காண்கின்றவர்கள் என்னைவிட்டு ஓடுகின்றனர்.
|
13. பலர் என்னை இழித்துப் பேசுவது என்காதில் விழுந்தது; எப்பக்கமும் அச்சம் என்னைச் சூழ்கிறது: பலரும் எனக்கெதிராய்ச் சதிசெய்து என் உயிரைப் பறிக்க எண்ணினர்.
|
15. என் கதி உம் கையில் உள்ளது: என் எதிரிகளிடமிருந்தும் என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்தும் என்னை விடுவித்தருளும்.
|
17. ஆண்டவரே, உம்மைக் கூவியழைத்தேன், நான் ஏமாற்றமடைய விடாதேயும்: தீயோர் ஏமாற்றமடைவார்களாக, கீழுலகில் விழுந்து வாயடைத்துப் போவார்களாக.
|
18. பொய் சொல்லும் வாய் பேச்சற்றுப் போவதாக: செருக்கும் புறக்கணிப்பும் கொண்டு நீதிமானுக்கு எதிராக ஆணவச் சொல் பேசும் நாவு அசைவற்றுப் போவதாக.
|
20. உம்மை நாடி வருவோர்க்கு அனைவர் முன்னிலையிலும் நீர் காட்டும் அருள் எத்துணை மிகுதியானது! எதிரிகளுடைய சதிகளினின்று உம்முடைய திருமுகத்தின் ஆதரவால் அவர்களைப் பாதுகாக்கின்றீர்: தீ நாவுகளுடைய பேச்சுக்கு இரையாகாதபடி அவர்களை உம் கூடாரத்தில் ஒளித்துக் காக்கின்றீர்.
|
21. ஆண்டவர் வாழ்த்துப் பெறுவாராக: ஏனெனில், அரண்கொண்ட நகரத்தில் என் மீது தம் வியப்புக்குரிய இரக்கத்தைக் காட்டியுள்ளார்.
|
22. நானோ, "உம் திருமுன்னிலையிலிருந்து தள்ளிவிடப்பட்டேன்!" என்று அச்சம் மேலிட்டவனாய்ச் சொல்லலானேன்: நீரோ என் வேண்டுதலின் குரலைக் கேட்கலானீர்; நான் உம்மை நோக்கிக் கூப்பிட்ட போது எனக்குச் செவிகொடுத்தீர்.
|
23. ஆண்டவருடைய புனிதர்களே, அவருக்கு அன்பு காட்டுங்கள்: விசுவாசமுள்ளவர்களை ஆண்டவர் பாதுகாக்கிறார்; செருக்குற்று நடப்பவர்களுக்கு அவர் நிறைவான தண்டனை அளிக்கின்றார்.
|