தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. வானோர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்: மாட்சியும் வல்லமையும் ஆண்டவருக்குரியதென வாழ்த்துங்கள்.
2. ஆண்டவரது பெயருக்கு உரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்: அவருடைய திருமன்றத்தில் அவரை வழிபடுங்கள்.
3. நீர்த்திரள்களின் மீது ஆண்டவரின் குரல் ஒலிக்கின்றது, மகத்துவமிக்க ஆண்டவர் பேரிடி முழங்குகின்றார்: நீர்ப்பரப்பின் மீது ஆண்டவர் விளங்குகின்றார்.
4. ஆண்டவருடைய குரல் வலிமை வாய்ந்தது, அவருடைய குரல் மாட்சிமை மிக்கது,
5. ஆண்டவருடைய குரல் கேதுரு மரங்களை முறித்தெறிகிறது: லீபான் மலையின் கேதுரு மரங்களை ஆண்டவர் பெயர்த்தெறிகிறார்.
6. லீபான் மலையை அவர் கன்றுக்குட்டி போல் துள்ளச் செய்கிறார்: சாயியோன் மலையை இளம் காட்டெருது போல் துள்ளி விழச் செய்கிறார்.
7. ஆண்டவருடைய குரல் நெருப்புத் தழலை எழச்செய்கிறது.
8. ஆண்டவருடைய குரல் பாலைவனத்தை அதிரச் செய்கிறது: காதோஷ் பாலைவெளியை அதிரச் செய்கிறது.
9. ஆண்டவருடைய குரல் கருவாலி மரங்களை முறித்து விடுகிறது; காடுகளை அழித்து வெறுமை ஆக்குகிறது: அவரது ஆலயத்தில் எல்லாரும், 'போற்றி! போற்றி!' என்று ஆர்ப்பரிக்கின்றனர்.
10. வெள்ளப்பெருக்கின் மீது விளங்குகின்றார் ஆண்டவர்: என்றென்றும் அரசரென வீற்றிருப்பார் ஆண்டவர்.
11. ஆண்டவர் தம் மக்களுக்கு வலிமையைத் தந்தருள்வார்: அமைதியளித்து அவர்களுக்கு ஆசியளிப்பார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 29 of Total Chapters 150
சங்கீதம் 29:9
1. வானோர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்: மாட்சியும் வல்லமையும் ஆண்டவருக்குரியதென வாழ்த்துங்கள்.
2. ஆண்டவரது பெயருக்கு உரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்: அவருடைய திருமன்றத்தில் அவரை வழிபடுங்கள்.
3. நீர்த்திரள்களின் மீது ஆண்டவரின் குரல் ஒலிக்கின்றது, மகத்துவமிக்க ஆண்டவர் பேரிடி முழங்குகின்றார்: நீர்ப்பரப்பின் மீது ஆண்டவர் விளங்குகின்றார்.
4. ஆண்டவருடைய குரல் வலிமை வாய்ந்தது, அவருடைய குரல் மாட்சிமை மிக்கது,
5. ஆண்டவருடைய குரல் கேதுரு மரங்களை முறித்தெறிகிறது: லீபான் மலையின் கேதுரு மரங்களை ஆண்டவர் பெயர்த்தெறிகிறார்.
6. லீபான் மலையை அவர் கன்றுக்குட்டி போல் துள்ளச் செய்கிறார்: சாயியோன் மலையை இளம் காட்டெருது போல் துள்ளி விழச் செய்கிறார்.
7. ஆண்டவருடைய குரல் நெருப்புத் தழலை எழச்செய்கிறது.
8. ஆண்டவருடைய குரல் பாலைவனத்தை அதிரச் செய்கிறது: காதோஷ் பாலைவெளியை அதிரச் செய்கிறது.
9. ஆண்டவருடைய குரல் கருவாலி மரங்களை முறித்து விடுகிறது; காடுகளை அழித்து வெறுமை ஆக்குகிறது: அவரது ஆலயத்தில் எல்லாரும், 'போற்றி! போற்றி!' என்று ஆர்ப்பரிக்கின்றனர்.
10. வெள்ளப்பெருக்கின் மீது விளங்குகின்றார் ஆண்டவர்: என்றென்றும் அரசரென வீற்றிருப்பார் ஆண்டவர்.
11. ஆண்டவர் தம் மக்களுக்கு வலிமையைத் தந்தருள்வார்: அமைதியளித்து அவர்களுக்கு ஆசியளிப்பார்.
Total 150 Chapters, Current Chapter 29 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References