2. ஆண்டவரது பெயருக்கு உரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்: அவருடைய திருமன்றத்தில் அவரை வழிபடுங்கள்.
|
3. நீர்த்திரள்களின் மீது ஆண்டவரின் குரல் ஒலிக்கின்றது, மகத்துவமிக்க ஆண்டவர் பேரிடி முழங்குகின்றார்: நீர்ப்பரப்பின் மீது ஆண்டவர் விளங்குகின்றார்.
|
5. ஆண்டவருடைய குரல் கேதுரு மரங்களை முறித்தெறிகிறது: லீபான் மலையின் கேதுரு மரங்களை ஆண்டவர் பெயர்த்தெறிகிறார்.
|
6. லீபான் மலையை அவர் கன்றுக்குட்டி போல் துள்ளச் செய்கிறார்: சாயியோன் மலையை இளம் காட்டெருது போல் துள்ளி விழச் செய்கிறார்.
|
9. ஆண்டவருடைய குரல் கருவாலி மரங்களை முறித்து விடுகிறது; காடுகளை அழித்து வெறுமை ஆக்குகிறது: அவரது ஆலயத்தில் எல்லாரும், 'போற்றி! போற்றி!' என்று ஆர்ப்பரிக்கின்றனர்.
|