1. ஆண்வரே உமது வல்லமையை நினைத்து அரசர் மகிழ்வுறுகிறார்: நீர் தரும் உதவியை நினைத்து எவ்வளவோ அக்களிப்புக் கொள்கின்றார்.
|
2. அவரது உள்ளத்தின் விருப்பம் நிறைவேறச் செய்தீர்: வாய் திறந்து அவர் உம்மிடம் கேட்டதை நீர் புறக்கணிக்கவில்லை.
|
3. அவரை எதிர்கொண்டுபோய் நலமிக்க ஆசியை நிரம்ப அளித்தீர்: அவர் தலையில் தூயதங்கத்தாலான முடியைச் சூட்டினீர்.
|
7. ஏனெனில், ஆண்டவரில் தான் அரசர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்: உன்னதரின் அருளை முன்னிட்டு அவர் அசைவுறுவதில்லை.
|
8. உம் எதிரிகள் அனைவரையும் உமது கரம் மேற்கொள்வதாக: உம்மைப் பகைப்பவர்களை உமது வலக்கரம் தேடிப்பிடிப்பதாக.
|
9. நீர் வெளிப்படும்போது, தீச்சூளையில் போடுவது போல அவர்களைத் தொலைத்துவிடும்: ஆண்டவர் அவர்களைத் தம் சினத்தால் தொலைத்து விடுவாராக; நெருப்பு அவர்களை விழுங்கி விடுவதாக.
|
11. உமக்குத் தீங்கிழைக்க அவர்கள் திட்டமிட்டாலும், வஞ்சகமாய்ச் சதி செய்தாலும் ஒரு நாளும் வெற்றி காணமாட்டார்கள்.
|