5. அங்கே கடவுள் கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார்; மணவறையினின்று புறப்படும் மணமகன் போல அவன் எழுகின்றான்: பந்தய வீரனைப்போல அக்களிப்போடு குறித்த வழியில் விரைகின்றான்.
|
7. ஆண்டவரது திருச்சட்டம் சால்புடையது; ஆன்மாவுக்குப் புத்துயிர் ஊட்டுவது: ஆண்டவருடைய கட்டளை உறுதியானது, எளியோருக்கு அறிவூட்டுவது.
|
8. ஆண்டவருடைய கட்டளைகள் நேரியவை; உள்ளத்திற்கு மகிழ்ச்சி ஊட்டுபவை: ஆண்டவரது கற்பனை தூய்மையானது; கண்களுக்கு ஒளியூட்டுவது.
|
9. ஆண்டவர்மீதுள்ள அச்சம் புனிதமானது; என்றென்றும் நிலைத்திருப்பது: ஆண்டவருடைய தீர்ப்புகள் உண்மையானவை; அவை எல்லாம் நீதியானவை.
|
12. குற்றங்குறைகளை யார் கண்டுணர்வர்? எனவே, மறைவாயுள்ள என் குற்றங்களை நீக்கி என்னைப் புனிதப்படுத்தும்.
|
13. தற்பெருமையினின்று உம் ஊழியனைக் காத்தருளும்; அது என்னை அடிமைப்படுத்தாதிருப்பதாக: அப்போது நான் குற்றமற்றவனாகி, பெரும் பாவங்களினின்று விடுபட்டுத் தூயவனாவேன்.
|
14. எனக்கு அடைக்கலமும் என் மீட்பருமான ஆண்டவரே, உம் முன்னிலையில் என் வாய் மொழியும், என் இதயச் சிந்தனையும் உமக்கு உகந்தனவாகட்டும்.
|