2. ஆண்டவரே, நீரே என் கற்பாறை, என் அரண், என் மீட்பர்: என் இறைவனாக உள்ளவரே, நான் அடைக்கலம் புகுவதற்கு ஏற்ற கோட்டையாக உள்ளவரே, என் கேடயமும் எனக்கு மீட்பளிக்கும் வலிமையும் என் அடைக்கலமுமாக உள்ளவரே!
|
4. சாகடிக்கக் கூடிய பெருவெள்ளம் என்னைச் சூழ்ந்துகொண்டது: ஆபத்துக்குரிய வெள்ளம் என்னை அச்சத்தில் ஆழ்த்தியது.
|
6. துன்ப வேளையில் நான் ஆண்டவரை அழைத்தேன்; என் இறைவனை நோக்கி கூக்குரலிட்டேன்: தம் ஆலயத்தில் நின்று என் குரலை அவர் கேட்டருளினார்; என் கூக்குரல் அவர் செவியில் விழுந்தது.
|
7. அப்போது பூமி அசைந்தது, அதிர்ந்தது, மலைகளின் அடித்தளம் கிடுகிடுத்தது: ஏனெனில் அவர் கோபம் மூண்டெழுந்தது.
|
8. அவர் நாசியினின்று கோபப்புகை கிளம்பியது, எரித்து விடும் நெருப்பு அவர் வாயினின்று எழும்பியது: எரிதலும் அவரிடமிருந்து புறப்பட்டது.
|
11. இருளைத் தமக்குப் போர்வையாக அணிந்தார்: நீரைத் தாங்கிய இருண்ட மேகங்கள் அவருக்குக் கூடாரம் போலாயிற்று.
|
15. ஆண்டவர் விடுத்த கடுஞ்சொல்லால், அவருடைய கோபப் புயலின் வேகத்தால், கடலின் நீரோட்டங்கள் வெளிப்பட்டன: பூவுலகில் அடித்தளங்கள் வெளியாயின.
|
16. வானினின்று தம் கையை நீட்டி என்னைப் பிடித்துக்கொண்டார்: பெருவெள்ளத்தினின்று என்னைத் தூக்கிவிட்டார்.
|
17. வலிமைமிக்க என் எதிரினின்று என்னை விடுவித்தார்: என்னைவிட வலிமைமிக்க பகைவர்களிடமிருந்து என்னைக் காத்தார்.
|
19. நெருக்கடி இல்லாத இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்: என்மீது அன்பு கூர்ந்ததால் என்னைக் காத்தார்.
|
20. என்னுடைய நீதி நேர்மைக்கு ஏற்ப எனக்குப் பலனளித்தார்: என் செயல்கள் மாசற்றவையாயிருப்பதால் எனக்குக் கைம்மாறு செய்தார்.
|
22. அவருடைய கற்பனைகளையெல்லாம் என் கண்முன் கொண்டிருந்தேன்: அவருடைய கட்டளைகளின் வழியை விட்டு நான் அகலவில்லை.
|
24. என்னுடைய நீதி நேர்மைக்கேற்ப எனக்குப் பலன் அளித்தார்: அவர் முன்பாக என் செயல்கள் மாசற்றவையாயிருப்பதால், எனக்குக் கைம்மாறு செய்தார்.
|
25. நேர்மையுள்ளவனிடம் நீர் நேர்மையுள்ளவராய் விளங்குகிறீர்: குற்றமற்றவனிடம் நீர் குற்றமற்றவராய் விளங்குகிறீர்.
|
26. தூய்மையுள்ளவனிடம் நீர் தூய்மையுள்ளவராய் விளங்குகிறீர்: கபடுள்ளவனிடம் நீர் விவேகமுள்ளவராய் நடந்துகொள்கிறீர்.
|
27. ஏனெனில், சிறுமையுற்ற மக்களுக்கு நீர் மீட்பளிக்கின்றீர்: தற்பெருமை கொண்டோரின் பார்வையை நீர் ஒடுக்குகின்றீர்.
|
28. ஆண்டவரே, நீர் என் விளக்கு சுடர்விட்டு எரியச் செய்கிறீர்: என் இறைவா, நீர் என் இருட்டை வெளிச்சமாக்குகின்றீர்.
|
30. கடவுள் காட்டும் வழி குற்றமற்றது, ஆண்டவருடைய வாக்குறுதி புடமிடப்பட்டது: அவரிடம் அடைக்கலம் புகுவோரனைவருக்கும் அவரே கேடயம்.
|
34. என் கைகளைப் போருக்குப் பழக்கியவர் அவரே: வெண்கல வில்லை வளைப்பதற்கு என் புயத்துக்கு உறுதியளித்தவர் அவரே.
|
35. பாதுகாப்புத் தரும் உம் கேடத்தை நீர் எனக்கு அளித்தீர்: உமது வலக்கரம் என்னை ஆதரித்தது; நீர் என்னிடம் காட்டிய பரிவு நான் மாண்புறச் செய்தது.
|
37. என் எதிரிகளை நான் பின்தொடர்ந்து பிடித்தேன்: அவர்களைத் தொலைக்கும்வரையில் நான் திரும்பிப் போகவில்லை.
|
38. அவர்களை நான் வதைத் தொழித்தேன், அவர்கள் எழுந்திருக்கவும் முடியவில்லை: என் காலடிகளில் அவர்கள் மிதிபடலாயினர்.
|
41. அவர்கள் கூவியழைத்தனர்; ஆனால் அவர்களைக் காக்க ஒருவருமில்லை: ஆண்டவரை நோக்கி அவர்கள் கூவினர்; அவரே அதற்குச் செவிகொடுக்கவில்லை.
|
42. எனவே, காற்றில் பறக்கும் தூசிபோல அவர்களைத் தவிடுபொடியாக்கினேன்: தெருவில் கிடக்கும் புழுதி போல அவர்களை மிதித்து ஒடுக்கினேன்.
|
45. அந்நியர் வந்து எனக்கு இச்சகம் பேசினர். வேற்றினத்தார் வலிவிழந்தனர்: அச்சத்தோடு தங்கள் கோட்டைகளினின்று வெளியேறினர்.
|
46. ஆண்டவர் வாழ்க, என் கற்பாறையாகிய அவர் வாழ்த்தப்பெறுவாராக: என் மீட்பரான இறைவன் பெரிதும் புகழப்படுவாராக.
|
48. என் எதிரிகளினின்று நீரே என்னை விடுவித்தீர்: என்னைத் தாக்கியவர்கள் மீது என்னைத் தலைவனாக உயர்த்தினீர், கொடியவனிடமிருந்து என்னை விடுவித்தீர்.
|
50. நீர் ஏற்படுத்திய அரசருக்குப் பெரிய வெற்றிகளை அளித்தவர் நீரே: உம்மால் அபிஷுகமான தாவீதுக்கும் அவர் தலைமுறைக்கும் என்றென்றும் இரக்கம் காட்டியவர் நீரே.
|