2. இஸ்ராயேல் இனத்தார் தம்மைப் படைத்தவரை நினைத்து அகமகிழ்வார்களாக: சீயோன் மக்கள் தம் அரசரை நினைத்துக் களிகூர்வார்களாக.
|
3. நடனம் செய்து அவரது பெயரைப் புகழ்வார்களாக: தம்புராவும் யாழும் கொண்டு அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக.
|
6. அவர்களது நாவில் இறைவனது பெரும் புகழ் ஒலிப்பதாக: இருபுறமும் கருக்குள்ள பட்டயங்களைத் தம் கரங்களில் தாங்குவார்களாக!
|
8. அவர்களுடைய மன்னர்களைச் சிறைப்படுத்துவார்களாக: அவர்களுடைய தலைவர்களுக்கு இருப்பு விலங்கிடுவார்களாக!
|
9. குறிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்களுக்கு வழங்குவார்களாக: இத்தகைய மகிமை அவர் தம் புனிதர்கள் அனைவர்க்கும் உண்டாகும்.
|