1. அல்லேலூயா! ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர் நல்லவர். நம் இறைவனுக்குப் புகழ் பாடுங்கள்: ஏனெனில் அவர் இனிமையுள்ளவர்; அவரைப் புகழ்வது தகுமே.
|
8. வானத்தில் மேகங்கள் கவியச் செய்பவர் அவரே: பூமி மீது மழையைப் பொழிபவர் அவரே. மலைகளில் புல் பூண்டுகள் முளைக்கச் செய்பவர் அவரே: மனிதனுக்குப் பயன்படச் செடி கொடி வளரச் செய்பவர் அவரே.
|
9. கால்நடைகளுக்கு உணவு அளிப்பவர் அவரே: தம்மை நோக்கிக் கூவும் காக்கை குஞ்சுகளுக்குத் தீனி தருபவர் அவரே.
|
13. ஏனெனில், அவர் உன் கதவுகளின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தினார்: உன்னகத்துள்ள உன் மக்களுக்கு ஆசியளித்தார்.
|
19. யாக்கோபின் இனத்தார்க்குத் தம் வார்த்தையை வெளிப்படுத்தினார்: இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளைகளையும் நியமங்களையும் அறிவித்தார்.
|
20. வேறெந்த இனத்தார்க்கும் இங்ஙனம் செய்ததில்லை: தம் கட்டளைகளை அவர்களுக்கு வெளியிட்டதில்லை. அல்லேலூயா!
|