4. அவனுடைய ஆவி பிரிய, தான் தோன்றிய மண்ணுக்கே திரும்புகிறான்: அப்போது அவன் திட்டங்கள் எல்லாம் பாழாகும்.
|
5. யாக்கோபின் இறைவன் யாருக்குத் துணை புரிகிறாரோ அவன் பேறுபெற்றவன்: தம் கடவுளாகிய ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்பான்.
|
6. அவரே வானத்தையும் வையத்தையும் கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினார்: அவர் என்றென்றும் சொல் தவறாதவர்.
|
7. துன்புறுத்தப்படுவோர்க்கு நீதி வழங்குகிறார்: பசியுற்றோர்க்கு உணவளிக்கிறார்; சிறைப்பட்டவர்களை ஆண்டவர் விடுவிக்கிறார்.
|
8. குருடருடைய கண்களை ஆண்டவர் திறந்து விடுகிறார்; தாழ்த்தப்பட்டவர்களை ஆண்டவர் தூக்கி விடுகிறார்; நீதிமான்கள் மீது ஆண்டவர் அன்பு கூர்கிறார்.
|
9. அந்நியரை ஆண்டவர் காப்பாற்றுகிறார்; அனாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறார்: பாவிகளின் திட்டங்களைக் கலைத்து விடுகிறார்.
|