1. என் இறைவா, என் அரசே, நான் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்: என்றென்றும் உம் திருப்பெயரைப் வாழ்த்துவேன்.
|
4. தலைமுறை தலைமுறையாக மனிதர் உம்முடைய செயல்களை எடுத்துரைப்பர்: தலைமுறை தலைமுறையாக உமது வல்லமையை வெளிப்படுத்துவார்கள்.
|
5. உம்முடைய மகத்துவத்தின் சொல்லரிய மாட்சிமையைப் பற்றிப் பேசுவர்: உம் வியத்தகு செயல்களை எடுத்துரைப்பர்.
|
12. இவ்வாறு மனுமக்கள் உம் வல்லமையை அறிந்துகொள்வர்: உமது மாண்புமிக்க அரசின் வல்லமையைத் தெரிந்து கொள்வர்.
|
13. உமது அரசு ஊழிஊழியாக உள்ள அரசு; உம்முடைய ஆட்சி தலைமுறை தலைமுறையாக நிலைத்துள்ளது: ஆண்டவர் தம் வார்த்தைகளிலெல்லாம் உண்மையுள்ளவராயிருக்கிறார்; தம் செயல்களிலும் புனிதமானவர்.
|
15. ஆண்டவரே, எல்லாருடைய கண்களும் உம்மையே நம்பிக்கையுடன் நோக்குகின்றன: எல்லாருக்கும் நீர் தக்க காலத்தில் உணவளிக்கிறீர்.
|
18. தம்மைக் கூவியழைக்கும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் உள்ளார்: நேர்மையுடன் தம்மைக் கூவியழைக்கிற யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் உள்ளார்.
|
21. ஆண்டவருடைய புகழ்ச்சியை என் நா எடுத்தியம்புவதாக: மனிதர் யாவரும் என்றென்றும் அவருடைய திருப்பெயரை வாழ்த்துவார்களாக.
|