1. என் அடைக்கலப் பாறையாகிய ஆண்டவர் போற்றி; போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர்: சண்டையிட என் கைக்குப் பலமளிப்பவர் அவரே.
|
2. எனக்கு இரக்கம் காட்டுபவர், என் அடைக்கலக்கோட்டை அவரே: எனக்குப் பாதுகாப்பும் விடுதலையும் அளிப்பவர் அவரே. என் கேடயமும் புகலிடமும் அவரே: மக்கள் இனத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே.
|
7. வானினின்று உமது கரத்தை நீட்டியருளும்: பெரு வெள்ளம் போல் எழும் வேற்றினத்தார் கையினின்று என்னை விடுவித்துக் காத்தருளும்.
|
11. தீயவரின் வாள்படையினின்று என்னை விடுவித்தருளும்: வேற்றினத்தார் கையினின்று என்கைக் காத்தருளும். அவர்கள் பேசுவது பொய்: அவர்கள் செய்யச் சபதமிடுவது வஞ்சகம்.
|
12. இளமையுடன் திகழும் எம் மக்கள் வளரும் செடிகள் போல் இருப்பார்களாக: எம் இளங்குமரிகள் செதுக்கப்பட்ட மூலைக்கற்கள் போலவும், ஆலயத் தூண்கள் போலவும் இருப்பார்களாக.
|
13. எம் களஞ்சியங்கள் நிறைந்திருப்பனவாக: எல்லாவிதத் தானியங்களாலும் நிறைந்திருப்பனவாக. எங்கள் ஆடுகள் ஆயிரம் மடங்கு பலுகட்டும்: எங்கள் வயல்களில் அவைகள் பல்லாயிரமாகப் பெருகட்டும்.
|
14. எங்கள் மாடுகளும் பலுகட்டும்; எங்கள் நகர மதில்களுக்குச் சேதமோ, எங்களுக்கு நாடு கடத்தப்பட்ட வாழ்வோ இல்லாதிருக்கட்டும்: எங்கள் ஊர்த் தெருக்களில் புலம்பல் இல்லாதிருக்கட்டும்.
|