2. எனக்குற்ற நெருக்கடியை அவர் முன்னிலையில் எடுத்துச் சொல்லுகிறேன்: அவர் திருமுன்னே என் கவலையை உரைக்கிறேன்.
|
3. என்னகத்துள் என் மனம் கவலையுற்றிருந்தது: நீரோ நான் செல்லும் வழியை அறிந்தேயிருக்கிறீர்: நான் செல்லும் வழியில் அவர்கள் கண்ணி வைத்துள்ளனர்.
|
4. வலப்புறம் என் கண்ணைத் திருப்புகிறேன்; என்னைக் கவனிப்பவர் ஒருவருமில்லை: எனக்குப் புகலிடம் இல்லாமற் போயிற்று. என்னைப் பற்றிக் கவலைப்படுபவர் யாருமில்லை.
|
6. என் குரலுக்கு நீர் செவிசாய்த்தருளும்; ஏனெனில் துயர்மிக்கவனானேன்: என்னைத் துன்புறுத்துவோரினின்று எனக்கு விடுதலையளித்தருளும்; ஏனெனில், அவர்கள் என்னைவிட வலிமை மிக்கவர்கள்.
|
7. சிறையினின்று என்னை விடுவித்தருளும்; உமது பெயருக்கு நான் நன்றிசெலுத்துவேன்: நீதிமான்கள் என்னைச் சூழ்ந்து நிற்பர்; ஏனெனில் நீரெனக்கு நன்மை செய்கிறீர்.
|