2. தம் மனத்தில் தீமையை நினைப்பவர்களிடமிருந்து என்னை விடுவியும்: எந்நாளும் சண்டை சச்சரவுகளைக் கிளப்புவோரிடமிருந்து என்னை காத்தருளும்.
|
3. அவர்கள் தம் நாவுகளைப் பாம்பின் நாவைப் போலக் கூர்மையாக்குகிறார்கள்: அவர்கள் உதட்டின் கீழ் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சு.
|
4. ஆண்டவரே, தீயவன் கையினின்று என்னை மீட்டுக் கொள்ளும், கொடுமை செய்பவனிடமிருந்து என்னைக் காத்தருளும்: அவன் என்னைத் தடுக்கி விழச் செய்யப் பார்க்கிறான்.
|
5. செருக்குற்றோர் எனக்கு மறைவாகக் கண்ணி வைக்கிறார்கள்: வலை போல் எனக்குக் கண்ணி விரிக்கிறார்கள், வழியோரம் எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள்.
|
6. நானோ ஆண்டவரை நோக்கி வேண்டுவது, 'நீரே என் இறைவன்': ஆண்டவரே, என் குரலைக் கேட்டருளும், என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.
|
7. ஆண்டவரே, இறைவனே, எனக்கு வல்லமை மிக்க துணையானவரே, போர் நிகழும் நாளில் என் தலைக்குக் கவசமாய் இருப்பவர் நீரே.
|
11. தீ நாக்கு படைத்த மனிதன் உலகில் நெடுநாள் வாழ்வதில்லை: கொடுமை செய்பவன் மீது திடீரெனத் தீமைகள் வந்து விழும்.
|