தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. ஆண்டவரே, என் முழு மனத்துடன் உம்மைப் போற்றிப் புகழ்வேன்: ஏனெனில் நான் வாய் திறந்து உம்மிடம் சொன்னதைக் கேட்டருளினீர்; வான் தூதர் முன்னிலையில் உமக்குப் புகழ் பாடுவேன்.
2. உமது புனித ஆலயத்தில் உம்மை ஆராதிப்பேன்; உமது இரக்கத்தையும் சொல்லுறுதியையும் நினைத்து, உமது திருப்பெயரைப் புகழ்வேன்; ஏனெனில் அனைத்திற்கும் மேலாக உமது திருப்பெயரையும் உம் வாக்குறுதியையும் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
3. நான் உம்மைக் கூவியழைத்த நாளில் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்: என் ஆன்மாவுக்கு மேன் மேலும் வலிமை தந்தருளினீர்.
4. ஆண்டவரே, நீர் திருவாய் மலர்ந்தருளிய மொழிகளை உலகின் அரசர் அனைவரும் கேட்டு, உம்மைப் போற்றுவார்கள்.
5. ஆண்டவருடைய மகிமை உண்மையில் உன்னதமானது' என்று அவர்கள் ஆண்டவருடைய வழிகளைப் பற்றிப் புகழ்ந்து பாடுவார்கள்.
6. ஆண்டவர் உண்மையாகவே உன்னதமானவர் எனினும், எளியவரைக் கண்நோக்குகின்றார்: செருக்குற்றோரையோ வெகு தொலைவிலிருந்து காண்கிறார்.
7. நான் துன்பத்திடையே நடந்தாலும் என் உயிரைக் காப்பீர்: என் எதிரிகளின் சினத்துக்கு விரோதமாக உமது கரத்தை நீட்டினீர்; உமது வலக்கரம் என்னைக் காப்பாற்றும்.
8. ஆண்டவர் தாம் தொடங்கிய வேலையை எனக்கெனச் செய்து முடிப்பார்: ஆண்டவரே, உமது அருளன்பு என்றென்றும் நிலைத்துள்ளது; உம் படைப்புகளைக் கைவிடாதேயும்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 138 of Total Chapters 150
சங்கீதம் 138:5
1. ஆண்டவரே, என் முழு மனத்துடன் உம்மைப் போற்றிப் புகழ்வேன்: ஏனெனில் நான் வாய் திறந்து உம்மிடம் சொன்னதைக் கேட்டருளினீர்; வான் தூதர் முன்னிலையில் உமக்குப் புகழ் பாடுவேன்.
2. உமது புனித ஆலயத்தில் உம்மை ஆராதிப்பேன்; உமது இரக்கத்தையும் சொல்லுறுதியையும் நினைத்து, உமது திருப்பெயரைப் புகழ்வேன்; ஏனெனில் அனைத்திற்கும் மேலாக உமது திருப்பெயரையும் உம் வாக்குறுதியையும் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
3. நான் உம்மைக் கூவியழைத்த நாளில் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்: என் ஆன்மாவுக்கு மேன் மேலும் வலிமை தந்தருளினீர்.
4. ஆண்டவரே, நீர் திருவாய் மலர்ந்தருளிய மொழிகளை உலகின் அரசர் அனைவரும் கேட்டு, உம்மைப் போற்றுவார்கள்.
5. ஆண்டவருடைய மகிமை உண்மையில் உன்னதமானது' என்று அவர்கள் ஆண்டவருடைய வழிகளைப் பற்றிப் புகழ்ந்து பாடுவார்கள்.
6. ஆண்டவர் உண்மையாகவே உன்னதமானவர் எனினும், எளியவரைக் கண்நோக்குகின்றார்: செருக்குற்றோரையோ வெகு தொலைவிலிருந்து காண்கிறார்.
7. நான் துன்பத்திடையே நடந்தாலும் என் உயிரைக் காப்பீர்: என் எதிரிகளின் சினத்துக்கு விரோதமாக உமது கரத்தை நீட்டினீர்; உமது வலக்கரம் என்னைக் காப்பாற்றும்.
8. ஆண்டவர் தாம் தொடங்கிய வேலையை எனக்கெனச் செய்து முடிப்பார்: ஆண்டவரே, உமது அருளன்பு என்றென்றும் நிலைத்துள்ளது; உம் படைப்புகளைக் கைவிடாதேயும்.
Total 150 Chapters, Current Chapter 138 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References