தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து சீயோனை நினைத்த போது, நாங்கள் கண்ணீர் சிந்தினோம்.
2. அந்த நாட்டு அலரிச் செடிகள் மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம்.
3. எங்களைச் சிறையாக்கியவர்கள், நாங்கள் பாடும்படி கேட்டார்கள்; எங்களைத் துன்புறுத்தியவர்கள் மகிழ்ச்சிப்பா இசைக்கச் சொன்னார்கள்: 'சீயோனைப் பற்றிக் கீதங்கள் சிலவற்றைப் பாடிக்காட்டுங்கள்' என்றார்கள்.
4. ஆண்டவருடைய பாடலை அந்நிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?
5. யெருசலேமே நானுன்னை மறப்பதாயிருந்தால், என் வலக்கை சூம்பிப் போவதாக.
6. உன்னை நான் நினையாதிருந்தால் என் நாவு மேல்வாயோடு ஒட்டிக் கொள்வதாக: எனக்குள்ள மகிழ்ச்சிக்கெல்லாம் மேலானதாக நான் யெருசலேமைக் கருதாவிடில் எனக்கு இதெல்லாம் நிகழ்வதாக.
7. ஆண்டவரே, ஏதோமின் மக்களுக்கு எதிராக யெருசலேமின் நாளை நினைத்துக்கொள்ளும்: 'தகர்த்தெறியுங்கள், அடியோடு தகர்த்தெறியுங்கள்' என்று அவர்கள் சொன்னார்களே!
8. பாழாக்கும் பாபிலோன் புதல்வியே, நீ எங்களுக்குச் செய்த தீமையை உனக்கே செய்கிறவன் பேறு பெற்றவன்.
9. உன் குழந்தைகளைப் பிடித்துக் கல்லின் மேல் மோதி அடிக்கிறவன் பேறு பெற்றவன்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 137 of Total Chapters 150
சங்கீதம் 137:21
1. பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து சீயோனை நினைத்த போது, நாங்கள் கண்ணீர் சிந்தினோம்.
2. அந்த நாட்டு அலரிச் செடிகள் மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம்.
3. எங்களைச் சிறையாக்கியவர்கள், நாங்கள் பாடும்படி கேட்டார்கள்; எங்களைத் துன்புறுத்தியவர்கள் மகிழ்ச்சிப்பா இசைக்கச் சொன்னார்கள்: 'சீயோனைப் பற்றிக் கீதங்கள் சிலவற்றைப் பாடிக்காட்டுங்கள்' என்றார்கள்.
4. ஆண்டவருடைய பாடலை அந்நிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?
5. யெருசலேமே நானுன்னை மறப்பதாயிருந்தால், என் வலக்கை சூம்பிப் போவதாக.
6. உன்னை நான் நினையாதிருந்தால் என் நாவு மேல்வாயோடு ஒட்டிக் கொள்வதாக: எனக்குள்ள மகிழ்ச்சிக்கெல்லாம் மேலானதாக நான் யெருசலேமைக் கருதாவிடில் எனக்கு இதெல்லாம் நிகழ்வதாக.
7. ஆண்டவரே, ஏதோமின் மக்களுக்கு எதிராக யெருசலேமின் நாளை நினைத்துக்கொள்ளும்: 'தகர்த்தெறியுங்கள், அடியோடு தகர்த்தெறியுங்கள்' என்று அவர்கள் சொன்னார்களே!
8. பாழாக்கும் பாபிலோன் புதல்வியே, நீ எங்களுக்குச் செய்த தீமையை உனக்கே செய்கிறவன் பேறு பெற்றவன்.
9. உன் குழந்தைகளைப் பிடித்துக் கல்லின் மேல் மோதி அடிக்கிறவன் பேறு பெற்றவன்.
Total 150 Chapters, Current Chapter 137 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References