2. ஆண்டவர் தம் இல்லத்தில் இருப்பவர்களே, நம் இறைவனின் இல்லத்து முற்றங்களில் உள்வர்களே, அவரைப் போற்றுங்கள்!
|
3. ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்: அவர் திருப்பெயருக்குப் புகழ் பாடுங்கள்; ஏனெனில், அது இனிமை மிக்கது.
|
4. ஆண்டவர் யாக்கோபைத் தமக்கெனத் தேர்ந்துகொண்டார்; இஸ்ராயேலைத் தம் சொந்த உடைமையாகத் தேர்ந்தெடுத்தார்.
|
6. விண்ணிலும் மண்ணிலும் கடலிலும் நீர்த்திரளின் ஆழத்திலும், தாம் விரும்பியதையெல்லாம் அவர் செய்கின்றார்.
|
7. பூமியின் கடையெல்லையினின்று முகில்களை வரவழைக்கின்றார்: மின்னல் மின்னி மழை பெய்யச் செய்கின்றார்; பதுங்கியிருந்த இடத்தினின்று காற்றை வரவழைக்கின்றார்.
|
9. எகிப்தே, உன்னிடம் அவர் அருங்குறிகளையும் புதுமைகளையும் செய்தார். பாரவோனுக்கும் அவன் ஊழியருக்கும் எதிராக அவற்றைச் செய்தார்.
|
11. அமோறைய மன்னன் செகோனையும், பாசான் மன்னன் ஓக் என்பவனையும், கானான் நாட்டு மன்னர்களையும் அவர் வதைத்தொழித்தார்.
|
13. ஆண்டவரே, உமது பெயர் என்றென்றும் நிலைத்துள்ளது: ஆண்டவரே, தலைமுறை தலைமுறையாக மக்கள் உம்மை நினைவுகூர்வர்.
|
18. அவற்றைச் செய்தவர்கள் அவற்றிற்கு ஒப்பாகின்றனர்: அவற்றின் மீது நம்பிக்கை வைப்பவர்கள், அவற்றிற்குச் சமமாகின்றனர்.
|