2. ஆண்டவருக்கு அவர் ஆணையிட்டதையும், யாக்கோபு வழிபட்ட வல்லமையுள்ள இறைவனுக்கு அவர் பொருந்தனை செய்ததையும் நினைத்துக் கொள்ளும்.
|
5. என் வீட்டில் நான் குடியிருக்கச் செல்வதில்லை: உறங்குவதற்குக் கட்டில் மீது ஏறுவதில்லை, கண்கள் அயர நான் விடுவதில்லை என்று அவர் கூறிய சபதத்தை நினைவு கூரும்.
|
6. இதோ வாக்குறுதிப் பேழை எபராத்தாவில் இருக்கிறதென்று கேள்விப்பட்டோம்: இயார் என்னும் வயல் வெளிகளில் அதனைக் கண்டு கொண்டோம்.
|
8. எழுந்தருளும் ஆண்டவரே, உமது இருப்பிடத்திற்கு எழுந்தருளும்: உமது மாட்சி விளங்கும் உமது பேழையும் எழுவதாக.
|
10. உம் ஊழியன் தாவீதின் பொருட்டு, நீர் அபிஷுகம் செய்தவரிடமிருந்து உமது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதேயும்.
|
11. தாவீதிற்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறினார்; அவரது வாக்குறுதி தவறாது: 'உம் வழித் தோன்றல் ஒருவனை உம் அரியணை மீது ஏற்றுவேன்.
|
12. உம் மக்கள் என் உடன்படிக்கையைக் காத்து நான் தரும் கட்டளைகளைக் கடைப்பிடித்தால், அவர்களுடைய மக்களும் என்றென்றுமே உம் அரியணை மீது அமர்வர்' என்றார்.
|
14. என்றென்றும் என் இளைப்பாற்றியின் இடம் இதுவே: இங்கே நான் தங்குவேன்; ஏனெனில் இதை நான் விரும்பினேன்,
|
15. இதில் விளையும் உணவுப் பொருளுக்கு என் ஆசியை வழங்குவேன்: அங்குள்ள ஏழை மக்களுக்கு நிறைய உணவு அளிப்பேன்.
|
16. அங்குள்ள குருக்களை மீட்பென்னும் ஆடையால் உடுத்துவேன்: அங்குள்ள புனிதர்கள் பெரு மகிழ்ச்சியுடன் அக்களிப்பர்.
|
17. தாவீதுக்கு அங்கே வல்லமை மிகு சந்ததியை எழுப்புவேன்: நான் அபிஷுகம் செய்தவருக்கு ஒரு விளக்கை ஆயத்தம் செய்வேன்.
|
18. அவருடைய எதிரிகளுக்கு வெட்கமெனும் ஆடையை உடுத்துவேன்: அவர் தலையின் மீதோ நான் வைக்கும் மணிமகுடம் விளங்கும்.'
|