7. நேரிய உள்ளத்தோடு நான் உம்மைப் போற்றிப் புகழ்வேன்: உம் நீதி மிக்க விதிகளை நான் கற்றுக் கொண்டு போற்றிப் புகழ்வேன்.
|
9. இளைஞன் தான் செல்லும் வழியில் புனிதனாய் எங்ஙனம் நடக்க இயலும்? உம் வார்த்தையைக் கடைப்பிடிப்பதால் தான்.
|
22. நிந்தனைக்கும் புறக்கணிப்புக்கும் நான் ஆளாக விடாதேயும்: ஏனெனில் நீர் தந்த ஆணைகளை நான் கடைப்பிடிக்கிறேன்.
|
23. தலைவர்கள் எனக்கெதிராய் அமர்ந்து பேசினாலும் உம் ஊழியன் உம்முடைய நியமங்களைக் குறித்தே தியானிக்கின்றான்.
|
26. என் நெறி முறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்: நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்; உம் நியமங்களை எனக்குப் படிப்பித்தருளும்.
|
27. உம் கட்டளைகள் காட்டும் வழியில் என்னைச் செலுத்தும்: நான் உம் வியப்புக்குரிய செயல்களைத் தியானிப்பேன்.
|
33. ஆண்டவரே, உம் நியமங்கள் குறிப்பிடும் வழியை எனக்குக் காட்டியருளும்: நான் அவற்றை அப்படியே கடைப்பிடிப்பேன்.
|
34. உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்குக் கற்பித்தருளும்: அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன்.
|
37. பயனற்றதின் மீது பார்வையைச் செலுத்தாதபடி என் கண்களைத் திருப்பி விடும்: நீர் காட்டும் வழியின் வாயிலாய் எனக்கு வாழ்வளித்தருளும்.
|
38. உம் ஊழியனுக்கு நீர் தந்த வாக்குறுதியை நிறைவேற்றும்: உமக்கு அஞ்சி நடப்போர்க்கன்றோ அவ்வாக்குறுதியை அளித்தீர்!
|
41. ஆண்டவரே, உம் இரக்கப் பெருக்கத்தை என் மீது பொழிந்தருளும்: உமது வாக்குறுதியின்படி எனக்கு உதவியளித்தருளும்.
|
42. அப்போது நான் என்னைப் பழிப்போர்க்கு ஏற்ற பதில் கூறுவேன்; ஏனெனில், உம் வார்த்தையில் எனக்கு நம்பிக்கை உண்டு.
|
43. என் வாயினின்று உண்மையை எடுத்து விடாதேயும்: ஏனெனில், உம் முறைமைகளின் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.
|
52. ஆண்டவரே, முற்காலத்தில் நீர் அளித்த தீர்ப்புகளை நான் நினைவுகூர்கிறேன்: அவை எனக்கு ஆறுதலாய் உள்ளன.
|
58. என் முழுமனத்தோடு உம் திருமுகத்தைப் பார்த்து வேண்டினேன்: உமது வாக்குறுதிக்கேற்ப என் மேல் இரக்கம் வையும்.
|
69. ஆணவம் பிடித்தவர்கள் எனக்கெதிராய்ச் சதித் திட்டங்கள் செய்கிறார்கள்: நானோ முழுமனத்துடன் உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறேன்:
|
73. உம் கைகளே என்னைப் படைத்தன, என்னை உருவாக்கின: உம் கற்பனைகளை நான் கற்றுக் கொள்ள எனக்கு அறிவு புகட்டும்.
|
77. நான் வாழ்வு பெறும்படி உம் இரக்கப் பெருக்கம் எனக்கு உதவட்டும்: ஏனெனில், உமது திருச்சட்டத்தில் நான் இன்பம் காண்கிறேன்.
|
78. செருக்குற்றோர் வெட்கிப் போவார்களாக, அவர்கள் என்னைக் காரணமின்றித் துன்புறுத்துகின்றனர்: நானோ உம் கட்டளைகளைப் பற்றித் தியானம் செய்வேன்.
|
79. உமக்கு அஞ்சுவோர் என் சர்பாய்த் திரும்புவார்களாக: உம் ஆணைகளைப் பற்றிக் கவலையுறுவோர் என் பக்கம் இருப்பார்களாக.
|
84. உம் ஊழியனுக்கு இன்னும் உள்ள வாழ்நாள் எத்தனை? என்னைத் துன்புறுத்துவோருக்கு என்று தீர்ப்பளிப்பீர்?
|
86. நீர் தந்த கற்பனைகள் எல்லாம் உறுதியானவை; காரணமின்றி அவர்கள் என்னைத் துன்புறுத்துகின்றனர்: எனக்குத் துணை செய்யும்.
|
87. என் வாழ்வை இறுதி நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள் என்றே சொல்லலாம்: நானோ உம் கட்டளைகளைக் கைவிடவில்லை.
|
88. உமது இரக்கத்திற்கேற்ப என்னை உயிரோடு வைத்திரும்: உமது திருவாய் மலர்ந்த ஆணைகளை நான் கடைப்பிடிப்பேன்.
|
91. நீர் குறித்த விதிகளின்படி அவை எந்நாளும் நிலைத்துள்ளன. ஏனெனில், எல்லாம் உமக்கு ஊழியம் செய்கின்றன.
|
92. உமது திருச்சட்டம் எனக்கு இன்பம் தருவதாய் இல்லாதிருந்தால், என் துன்பத்தில் நான் மடிந்து போயிருப்பேன்.
|
98. என் எதிரிகளை விட என்னை அறிவுள்ளவன் ஆக்கியது உமது கற்பனை: ஏனெனில், என்றென்றும் அது என்னோடு உள்ளது.
|
99. எனக்கு அறிவு புகட்டுவோர் அனைவரினும் நான் அறிவாளியாயிருக்கிறேன்: ஏனென்றால் உம் ஆணைகளையே நான் தியானிக்கிறேன்.
|
101. தீய வழி எதிலும் அடி எடுத்து வைக்காதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்: உம் வார்த்தையின்படி நடப்பதே என் கவலை.
|
108. என் வாயினின்று எழும் இப்புகழ்ச்சிக் காணிக்கையை ஆண்டவரே, ஏற்றுக் கொள்ளும்: உம் முறைமைகளை எனக்குக் கற்பியும்.
|
112. உம் நியமங்களை நிறைவேற்றுவதே என் உள்ளத்துக் கவலை: என்றும், சற்றும் குறைவின்றி நிறைவேற்றுவதே என் கருத்து.
|
116. உமது வாக்குறுதிக்கேற்ப எனக்கு ஆதரவாயிரும், நான் வாழ்வேன்: எனக்குள்ள நம்பிக்கையின் பொருட்டு நான் வாழ்வேன்: எனக்குள்ள நம்பிக்கையின் பொருட்டு நான் வெட்கமுற விடாதேயும்.
|
119. பூவுலகின் பாவிகள் அனைவரையும் நீர் வெறும் கழிவடையாகக் கருதுகிறீர்: ஆகவே நான் உம் நியமங்களை நேசிக்கிறேன்.
|
120. உம்மீது கொண்டுள்ள அச்சத்தால் என் உடலும் நடுங்குகின்றது: உம் விதிமுறைகளுக்கு நான் அஞ்சி நடுங்குகிறேன்.
|
123. உமது உதவிக்காக ஏங்கி என் கண்கள் பூத்துப் போயின: நீதியுடன் நீர் வாக்களித்ததைப் பெற வேண்டுமென்று ஏங்குகிறேன்.
|
124. உம் நன்மைத்தனத்திற்கேற்ப உம் ஊழியனாகிய எனக்குத் தயவு காட்டும்: உம் நியமங்களை எனக்குக் கற்பியும்.
|
132. என் மீது உமது பார்வையைத் திருப்பி இரக்கம் வையும்: உம் மீது அன்பு கொள்பவர்களுக்கு இரங்குவது போல என் மீது இரங்கும்.
|
139. உம் திருச்சட்டத்தின் மீது எனக்குள்ள ஆர்வம் என்னை விழுங்குகின்றது: ஏனெனில், உம் எதிரிகள் உம் வார்த்தைகளை மறந்து விடுகின்றனர்.
|
145. முழு இதயத்துடன் உம்மை நோக்கிக் கூக்குரலிடுகிறேன்; ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்: உம் நியமங்களை நான் அனுசரிக்கிறேன்.
|
147. வைகறையில் உம்மிடம் வருகிறேன், நீர் உதவுமாறு மன்றாடுகிறேன்: உம் வார்த்தையில் நம்பிக்கை வைக்கிறேன்.
|
149. ஆண்டவரே, உமது இரக்கத்திற்கேற்ப என் மன்றாட்டைக் கேட்டருளும்: உமது தீர்ப்பின் படி எனக்கு வாழ்வளித்தருளும்.
|
150. என்னை அநியாயமாகத் துன்புறுத்துவோர் நெருங்கி வருகின்றனர்: அவர்களுக்கும் உமது திருச்சட்டத்திற்கும் வெகு தூரம்.
|
152. அவற்றை நீர் என்றென்றைக்கும் ஏற்படுத்தினீர் என்று, நீர் தந்த ஆணைகளினின்று முன்பே அறிந்திருக்கிறேன்.
|
153. என் துன்ப நிலையைப் பார்த்து அதிலிருந்து என்னை விடுவித்தருளும்: ஏனெனில், உமது திருச்சட்டத்தை நான் மறக்கவில்லை.
|
155. பாவிகள் மீட்புக்கு வெகு தொலைவிலுள்ளனர்: ஏனெனில், அவர்கள் உம் நியமங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
|
158. அக்கிரமம் செய்வோரைப் பார்த்தேன், பெரிதும் வருந்தினேன்: ஏனெனில், அவர்கள் உம் வாக்கைக் கடைப்பிடிப்பதில்லை.
|
159. ஆண்டவரே பாரும், நான் உம் கட்டளைகளை நேசிக்கிறேன்: உமது இரக்கத்திற்கேற்ப என்னை உயிரோடு காத்தருளும்.
|
160. உமது வார்த்தையின் உட்பொருள் உண்மையினின்று வழுவாதது: நீதி வாய்ந்த உம் தீர்ப்புகள் என்றும் நிலைத்திருப்பவை.
|
161. தலைவர்கள் என்னைக் காரணமின்றித் துன்புறுத்தினர்: என் இதயம் உம் வார்த்தைகள் மீது அச்சம் கொண்டுள்ளது.
|
165. உமது சட்டத்தை நேசிப்பவர்களுக்கு மிகுதியான அமைதியுண்டு: அவர்களை விழத்தாட்டக் கூடிய தடைகள் இல்லை.
|
168. உம் கட்டளைகளையும் கற்பனைகளையும் நான் அனுசரிக்கிறேன்: ஏனெனில், என் நடத்தை உமக்குத் தெரிந்திருக்கிறது.
|
174. ஆண்டவரே, உம்மிடமிருந்து வரும் மீட்பை நான் விரும்புகிறேன்: உமது திருசசட்டத்தில் நான் இன்பம் காண்கிறேன்.
|
176. வழி தவறிய ஆட்டைப் போல் நான் அலைந்து திரிகிறேன்; உம் ஊழியனைத் தேடியருளும்: ஏனெனில், உம் கற்பனைகளை நான் மறக்கவில்லை.
|