1. (115:1) அல்லேலூயா! ஆண்டவர் மீது அன்பு வைத்தேன்; ஏனெனில், என் மன்றாட்டின் குரலை அவர் கேட்டருளினார்.
|
3. (115:3) மரணத்தின் தளைகள் என்னை வளைத்துக் கொண்டன; பாதாளங்களின் கண்ணிகள் என்னைப் பற்றிக்கொண்டன. கவலைக்கும் துன்பத்துக்கும் நான் ஆளானேன்.
|
4. (115:4) நானோ ஆண்டவருடைய பெயரைக் கூவி அழைத்தேன்: 'ஓ ஆண்டவரே, என் உயிரைக் காத்தருளும்' என்று வேண்டினேன்.
|
8. (115:8) ஏனெனில், என் ஆன்மாவை மரணத்தினின்று விடுவித்தார்: நான் கண்ணீர் சிந்தாதபடியும் என் கால்கள் இடறி விழாதபடியும் காப்பாற்றினார்.
|
13. (4) மீட்புக்காக நன்றி கூறிக் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவருடைய திருப்பெயரைச் சொல்லிக் கூப்பிடுவேன்.
|
16. (7) ஆண்டவரே, நான் உம் ஊழியன்; உம் அடியேன்; உம் அடியாளின் மகன்: என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர்.
|
19. (10) ஆண்டவருடைய ஆலயத்தின் முற்றங்களிலும், யெருசலேமே, உன் நடுவிலும் ஆண்டவருக்கு என் பொருந்தனைகளைச் செலுத்துவேன்.
|