தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. (115:1) அல்லேலூயா! ஆண்டவர் மீது அன்பு வைத்தேன்; ஏனெனில், என் மன்றாட்டின் குரலை அவர் கேட்டருளினார்.
2. (115:2) ஏனெனில், அவரை நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தருளினார்.
3. (115:3) மரணத்தின் தளைகள் என்னை வளைத்துக் கொண்டன; பாதாளங்களின் கண்ணிகள் என்னைப் பற்றிக்கொண்டன. கவலைக்கும் துன்பத்துக்கும் நான் ஆளானேன்.
4. (115:4) நானோ ஆண்டவருடைய பெயரைக் கூவி அழைத்தேன்: 'ஓ ஆண்டவரே, என் உயிரைக் காத்தருளும்' என்று வேண்டினேன்.
5. (115:5) ஆண்டவர் கருணையும் நீதியுமுள்ளவர்: நம் இறைவன் இரக்கமுள்ளவர்.
6. (115:6) எளியோரை ஆண்டவர் காக்கின்றார்: துயர் மிக்கவனான எனக்கு மீட்பளித்தார்.
7. (115:7) நெஞ்சே நீ மீளவும் அமைதிகொள்: ஏனெனில் ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்.
8. (115:8) ஏனெனில், என் ஆன்மாவை மரணத்தினின்று விடுவித்தார்: நான் கண்ணீர் சிந்தாதபடியும் என் கால்கள் இடறி விழாதபடியும் காப்பாற்றினார்.
9. (115:9) நான் ஆண்டவர் திருமுன் நடந்திடுவேன்: வாழ்வோர் நாட்டில் வாழ்ந்திடுவேன்.
10. (1) மிக மிகத் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதுங் கூட நான் ஆண்டவரை நம்பினேன்.
11. (2) எந்த மனிதனும் நம்பிக்கைக்குரியவனல்லன்' என்று அச்சத்தால் மேலிட்டுச் சொன்னேன்.
12. (3) ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் என்ன கைம்மாறு செய்வேன்?
13. (4) மீட்புக்காக நன்றி கூறிக் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவருடைய திருப்பெயரைச் சொல்லிக் கூப்பிடுவேன்.
14. (5) ஆண்டவருடைய மக்கள் அனைவரிடையேயும், அவருக்கு என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
15. (6) ஆண்டவர் தம் அடியாரின் மரணம், அவருடைய பார்வையில் மிக மதிப்புக்குரியது.
16. (7) ஆண்டவரே, நான் உம் ஊழியன்; உம் அடியேன்; உம் அடியாளின் மகன்: என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர்.
17. (8) புகழ்ச்சிப் பலியை உமக்குச் செலுத்துவேன்; ஆண்டவருடைய திருப்பெயரைக் கூவி அழைப்பேன்.
18. (9) ஆண்டவருடைய மக்கள் அனைவரிடையேயும் அவருக்கு என் பொருந்தனைகளைச் செலுத்துவேன்.
19. (10) ஆண்டவருடைய ஆலயத்தின் முற்றங்களிலும், யெருசலேமே, உன் நடுவிலும் ஆண்டவருக்கு என் பொருந்தனைகளைச் செலுத்துவேன்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 116 of Total Chapters 150
சங்கீதம் 116:21
1. (115:1) அல்லேலூயா! ஆண்டவர் மீது அன்பு வைத்தேன்; ஏனெனில், என் மன்றாட்டின் குரலை அவர் கேட்டருளினார்.
2. (115:2) ஏனெனில், அவரை நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தருளினார்.
3. (115:3) மரணத்தின் தளைகள் என்னை வளைத்துக் கொண்டன; பாதாளங்களின் கண்ணிகள் என்னைப் பற்றிக்கொண்டன. கவலைக்கும் துன்பத்துக்கும் நான் ஆளானேன்.
4. (115:4) நானோ ஆண்டவருடைய பெயரைக் கூவி அழைத்தேன்: 'ஓ ஆண்டவரே, என் உயிரைக் காத்தருளும்' என்று வேண்டினேன்.
5. (115:5) ஆண்டவர் கருணையும் நீதியுமுள்ளவர்: நம் இறைவன் இரக்கமுள்ளவர்.
6. (115:6) எளியோரை ஆண்டவர் காக்கின்றார்: துயர் மிக்கவனான எனக்கு மீட்பளித்தார்.
7. (115:7) நெஞ்சே நீ மீளவும் அமைதிகொள்: ஏனெனில் ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்.
8. (115:8) ஏனெனில், என் ஆன்மாவை மரணத்தினின்று விடுவித்தார்: நான் கண்ணீர் சிந்தாதபடியும் என் கால்கள் இடறி விழாதபடியும் காப்பாற்றினார்.
9. (115:9) நான் ஆண்டவர் திருமுன் நடந்திடுவேன்: வாழ்வோர் நாட்டில் வாழ்ந்திடுவேன்.
10. (1) மிக மிகத் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதுங் கூட நான் ஆண்டவரை நம்பினேன்.
11. (2) எந்த மனிதனும் நம்பிக்கைக்குரியவனல்லன்' என்று அச்சத்தால் மேலிட்டுச் சொன்னேன்.
12. (3) ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் என்ன கைம்மாறு செய்வேன்?
13. (4) மீட்புக்காக நன்றி கூறிக் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவருடைய திருப்பெயரைச் சொல்லிக் கூப்பிடுவேன்.
14. (5) ஆண்டவருடைய மக்கள் அனைவரிடையேயும், அவருக்கு என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
15. (6) ஆண்டவர் தம் அடியாரின் மரணம், அவருடைய பார்வையில் மிக மதிப்புக்குரியது.
16. (7) ஆண்டவரே, நான் உம் ஊழியன்; உம் அடியேன்; உம் அடியாளின் மகன்: என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர்.
17. (8) புகழ்ச்சிப் பலியை உமக்குச் செலுத்துவேன்; ஆண்டவருடைய திருப்பெயரைக் கூவி அழைப்பேன்.
18. (9) ஆண்டவருடைய மக்கள் அனைவரிடையேயும் அவருக்கு என் பொருந்தனைகளைச் செலுத்துவேன்.
19. (10) ஆண்டவருடைய ஆலயத்தின் முற்றங்களிலும், யெருசலேமே, உன் நடுவிலும் ஆண்டவருக்கு என் பொருந்தனைகளைச் செலுத்துவேன்.
Total 150 Chapters, Current Chapter 116 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References