1. அல்லேலூயா! ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் பேறுபெற்றோன்: அவருடைய கட்டளைகளை நினைத்து அவன் இன்பம் கொள்வான்.
|
5. மனமிரங்கி கடன் கொடுக்கும் மனிதன் நல்லதைச் செய்கிறான்: தன் அலுவல்களை நீதியுடன் செய்பவனும் அப்படியே.
|
7. தீமையான செய்தி எதுவும் அவனை வருத்தத்துக்குள்ளாக்காது: அவன் இதயம் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து எதையும் தாங்கக் கூடியது.
|
8. அவன் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவனுக்கு அச்சம் மேலிடாது: தன் எதிரிகிள் சிதறுண்டு போவதை அவன் பார்ப்பான்.
|
9. ஏழைகளுக்குப் பகிர்ந்தளிப்பான்; அவனது ஈகை என்றும் நிலைத்திருக்கும்: அவனது வலிமை மகிமை பெற்று விளங்கும்.
|
10. பாவியோ அதைப் பார்த்துச் சினம் கொள்வான்; பல்லைக் கடித்துக் கொண்டு தளர்வுறுவான்: பாவிகள் ஆசையெல்லாம் அழியும்.
|