தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. அல்லேலூயா! ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் பேறுபெற்றோன்: அவருடைய கட்டளைகளை நினைத்து அவன் இன்பம் கொள்வான்.
2. அவனுடைய சந்ததி பூவுலகில் வலிமை மிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் சந்ததி ஆசி பெறும்.
3. செழுமையும் செல்வமும் அவன் இல்லத்தில உலவும். அவனுடைய ஈகை என்றென்றும் நிலைக்கும்.
4. இருளில் ஒளியென அவன் நேர்மையுள்ளவரிடையே விளங்குவான்: கருணை, இரக்கம், நீதி உள்ளவனாய் இருப்பான்.
5. மனமிரங்கி கடன் கொடுக்கும் மனிதன் நல்லதைச் செய்கிறான்: தன் அலுவல்களை நீதியுடன் செய்பவனும் அப்படியே.
6. எந்நாளும் அவன் அசைவுறான்: என்றென்றும் அவன் மக்கள் நினைவில் வாழ்வான்.
7. தீமையான செய்தி எதுவும் அவனை வருத்தத்துக்குள்ளாக்காது: அவன் இதயம் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து எதையும் தாங்கக் கூடியது.
8. அவன் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவனுக்கு அச்சம் மேலிடாது: தன் எதிரிகிள் சிதறுண்டு போவதை அவன் பார்ப்பான்.
9. ஏழைகளுக்குப் பகிர்ந்தளிப்பான்; அவனது ஈகை என்றும் நிலைத்திருக்கும்: அவனது வலிமை மகிமை பெற்று விளங்கும்.
10. பாவியோ அதைப் பார்த்துச் சினம் கொள்வான்; பல்லைக் கடித்துக் கொண்டு தளர்வுறுவான்: பாவிகள் ஆசையெல்லாம் அழியும்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 112 of Total Chapters 150
சங்கீதம் 112
1. அல்லேலூயா! ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் பேறுபெற்றோன்: அவருடைய கட்டளைகளை நினைத்து அவன் இன்பம் கொள்வான்.
2. அவனுடைய சந்ததி பூவுலகில் வலிமை மிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் சந்ததி ஆசி பெறும்.
3. செழுமையும் செல்வமும் அவன் இல்லத்தில உலவும். அவனுடைய ஈகை என்றென்றும் நிலைக்கும்.
4. இருளில் ஒளியென அவன் நேர்மையுள்ளவரிடையே விளங்குவான்: கருணை, இரக்கம், நீதி உள்ளவனாய் இருப்பான்.
5. மனமிரங்கி கடன் கொடுக்கும் மனிதன் நல்லதைச் செய்கிறான்: தன் அலுவல்களை நீதியுடன் செய்பவனும் அப்படியே.
6. எந்நாளும் அவன் அசைவுறான்: என்றென்றும் அவன் மக்கள் நினைவில் வாழ்வான்.
7. தீமையான செய்தி எதுவும் அவனை வருத்தத்துக்குள்ளாக்காது: அவன் இதயம் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து எதையும் தாங்கக் கூடியது.
8. அவன் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவனுக்கு அச்சம் மேலிடாது: தன் எதிரிகிள் சிதறுண்டு போவதை அவன் பார்ப்பான்.
9. ஏழைகளுக்குப் பகிர்ந்தளிப்பான்; அவனது ஈகை என்றும் நிலைத்திருக்கும்: அவனது வலிமை மகிமை பெற்று விளங்கும்.
10. பாவியோ அதைப் பார்த்துச் சினம் கொள்வான்; பல்லைக் கடித்துக் கொண்டு தளர்வுறுவான்: பாவிகள் ஆசையெல்லாம் அழியும்.
Total 150 Chapters, Current Chapter 112 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References