1. ஆண்டவர் என் ஆண்டவரிடம் சொன்னது: "நான் உம் பகைவரை உமக்குக் கால் மணையாக்கும் வரை நீர் என் வலப்பக்கத்தில் அமரும்."
|
2. வலிமை மிக்க உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார் உம் எதிரிகளிடையே அதிகாரம் செலுத்தும்.
|
3. புனிதம் சிறப்புற்றோங்க, நீர் உதித்த நாளிலே ஆட்சியுரிமையும் உம்மோடு உதித்தது: விடிவெள்ளி தோன்று முன் பனியைப் போல் உம்மை ஈன்றெடுத்தேன்.
|
4. மெல்கிசெதேக் முறைப்படி நீர் என்றென்றும் குருவே" என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்: சொன்ன சொல்லை மாற்றமாட்டார்.
|
6. நாடுகளுக்கு அவர் தீர்ப்பளிப்பார்; எதிரிகளைக் கொன்று குவிப்பார்; உலகெங்கும் தலைவர்களை அவர் நொறுக்குவார்.
|