1. உறுதி கொண்டுள்ளது என் உள்ளம் இறைவா, உறுதி கொண்டுள்ளது என் உள்ளம்: இன்னிசை பாடுவேன் புகழ்ப்பா இசைப்பேன்.
|
5. இறைவனே, நீர் வானங்களுக்கு மேலாக உன்னதராய் விளங்கியருளும்: உமது மாட்சிமை புவியனைத்தும் விளங்குவதாக.
|
6. உம்முடைய அன்பர்கள் விடுதலை பெறுமாறு உமது வலக்கரத்தால் எனக்குத் துணைசெய்யும்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
|
7. தம் திருத்தலத்தில் இறைவன் கூறியது: "அக்களிப்பிடையே சிக்கேமைக் கூறுபடுத்துவேன்; சூக்கோத் பள்ளத்தாக்கை அளவெடுத்துப் பிரிப்பேன்.
|
8. கிலேயாத் நாடும் என்னுடையதே; மனாசே நாடும் என்னுடையதே: எப்பிராயிம் எனக்குத் தலைச்சீரா, யூதா என்னுடைய செங்கோல்.
|
9. மோவாபு எனக்குப் பாதங் கழுவும் பாத்திரம்; ஏதோமின் மீது என் மிதியடியை எறிவேன்: பிலிஸ்தியாவின் மீது வெற்றி கொள்வேன்".
|