3. கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும், பல நாடுகளினின்றும் ஒன்று சேர்க்கப்பட்டவர்களும் இப்படிச் சொல்வார்களாக.
|
4. பாலை வெளியில் மனிதர் வாழாத இடத்தில் அவர்கள் அலைந்து திரிந்தனர்: குடியிருக்க ஒரு நகருக்குச் செல்ல அவர்கள் வழி காணவில்லை.
|
6. தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.
|
8. ஆண்டவருடைய இரக்கத்தை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துவார்களாக: மனுமக்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துக் கொள்வார்களாக.
|
12. பல துன்பங்களால் அவர்கள் உள்ளத்தைச் சிறுமைப்படுத்தினார்: தள்ளாடிப் போயினர்; அவர்களுக்குக் கைகொடுக்க ஒருவருமில்லை.
|
14. இருட்டிடங்களில் சோர்வுற்றுக் கிடந்த அவர்களை வெளியேற்றினார்: அவர்கள் கட்டுண்டிருந்த விலங்குகளைத் தகர்தெறிந்தார்.
|
15. ஆண்டவருடைய இரக்கத்தை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துவார்களாக: மனுமக்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துக் கொள்வார்களாக.
|
17. தாங்கள் செய்த அக்கிரமத்தினால் அவர்கள் நோய்களுக்கு உள்ளாயினர்: அவர்களுடைய பாவங்களின் பொருட்டுத் துன்பங்களுக்கு உள்ளாயினர்.
|
19. தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.
|
21. ஆண்டவருடைய இரக்கத்தை நினைத்து அவருக்கு நன்றி சொல்வார்களாக: மனுமக்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துக் கொள்வார்களாக.
|
26. வானமட்டும் மேலே வீசப்பட்டனர், பாதாளமட்டும் கீழே எறியப்பட்டனர்: அவர்கள் உள்ளமோ துன்ப நிலையைக் கண்டுத் தளர்வுற்றது.
|
28. தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.
|
30. அவ்வமைதியைக் கண்டு அவர்கள் மகிழ்ந்தனர்: அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றார்.
|
31. ஆண்டவருடைய இரக்கத்தை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துவார்களாக: மனுமக்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துக் கொள்வார்களாக.
|
34. செழிப்பான நிலத்தை உலர் நிலமாக்கினார்: அங்குக் குடியிருந்தவர்களின் அக்கிரமத்தின் பொருட்டு இப்படிச் செய்தார்.
|
38. அவர் ஆசி வழங்கினார், அவர்கள் பெருந்தொகையாய்ப் பலுகினர்: ஆடு மாடுகளையும் அவர்களுக்குக் கணக்கின்றித் தந்தார்.
|
42. நேர்மையுள்ளவர்கள் இதைப் பார்க்கின்றனர், பார்த்து மகிழ்கின்றனர்: தீயவர்களோ தங்கள் வாயை மூடிக்கொள்கின்றனர்.
|