தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. ஆண்டவரைப் போற்றுங்கள், அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்.
2. ஆண்டவரால் மீட்படைந்தோர், எதிரியின் கையினின்று மீட்கப்பட்டோர், இங்ஙனம் சொல்வார்களாக.
3. கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும், பல நாடுகளினின்றும் ஒன்று சேர்க்கப்பட்டவர்களும் இப்படிச் சொல்வார்களாக.
4. பாலை வெளியில் மனிதர் வாழாத இடத்தில் அவர்கள் அலைந்து திரிந்தனர்: குடியிருக்க ஒரு நகருக்குச் செல்ல அவர்கள் வழி காணவில்லை.
5. பசிகொண்டனர், தாகமுற்றனர்: மனமுடைந்து களைத்துப் போயினர்.
6. தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.
7. நேரிய பாதையில் அவர்களை வழி நடத்தினார்: குடியிருக்கும் நகரத்தை அவர்கள் அடையச் செய்தார்.
8. ஆண்டவருடைய இரக்கத்தை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துவார்களாக: மனுமக்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துக் கொள்வார்களாக.
9. பசியுற்றவனுக்கு அவர் நிறைவளித்தார்: பட்டினி கிடந்தவனை நன்மையால் நிரப்பினார்.
10. இருட்டிடங்களில் சோர்வுற்றுக் கிடந்தனர்: விலங்கிடப்பட்டுத் துன்பத்தில் உழன்றனர்.
11. ஏனெனில், கடவுளுடைய வாக்குறுதியை ஏற்காமல் அவரை எதிர்த்தனர்: உன்னதரின் திட்டத்தை அவமதித்தனர்.
12. பல துன்பங்களால் அவர்கள் உள்ளத்தைச் சிறுமைப்படுத்தினார்: தள்ளாடிப் போயினர்; அவர்களுக்குக் கைகொடுக்க ஒருவருமில்லை.
13. தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் விடுவித்தார்.
14. இருட்டிடங்களில் சோர்வுற்றுக் கிடந்த அவர்களை வெளியேற்றினார்: அவர்கள் கட்டுண்டிருந்த விலங்குகளைத் தகர்தெறிந்தார்.
15. ஆண்டவருடைய இரக்கத்தை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துவார்களாக: மனுமக்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துக் கொள்வார்களாக.
16. ஏனெனில், வெண்கலக் கதவுகளை அவர் தகர்த்துவிட்டார்: இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்து விட்டார்.
17. தாங்கள் செய்த அக்கிரமத்தினால் அவர்கள் நோய்களுக்கு உள்ளாயினர்: அவர்களுடைய பாவங்களின் பொருட்டுத் துன்பங்களுக்கு உள்ளாயினர்.
18. எந்த உணவின் மீதும் அவர்கள் மனம் செல்லவில்லை: சாவின் வாயில்களை அவர்கள் நெருங்கினார்கள்.
19. தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.
20. தம் வார்த்தையை விடுத்து அவர்களைக் குணப்படுத்தினார்: அழிவினின்று அவர்களை விடுத்தார்.
21. ஆண்டவருடைய இரக்கத்தை நினைத்து அவருக்கு நன்றி சொல்வார்களாக: மனுமக்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துக் கொள்வார்களாக.
22. புகழ்ச்சிப் பலிகளை அவர்கள் செலுத்துவார்களாக: அக்களிப்போடு அவருடைய செயல்களைச் சாற்றுவார்களாக.
23. அவர்கள் கப்பலேறிக் கடலைக் கடந்து, வியாபாரம் செய்யப் போயிருந்தார்கள்.
24. இவர்களும் ஆண்டவருடைய செயல்களைக் கண்டனர்: கடலில் அவருடைய வியத்தகு செயல்களைப் பார்த்தனர்.
25. அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல்காற்று எழுந்தது: கடல் கொந்தளிக்க, அலைகள் கொதித்தெழுந்தன.
26. வானமட்டும் மேலே வீசப்பட்டனர், பாதாளமட்டும் கீழே எறியப்பட்டனர்: அவர்கள் உள்ளமோ துன்ப நிலையைக் கண்டுத் தளர்வுற்றது.
27. குடியரைப் போல் தள்ளாடினர், தடுமாறினர்: அவர்கள் திறமையெல்லாம் மறைந்து போயிற்று.
28. தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.
29. புயல்காற்றை அவர் இளந்தென்றலாக மாற்றிவிட்டார்: கடல் அலைகளும் ஓய்ந்து விட்டன.
30. அவ்வமைதியைக் கண்டு அவர்கள் மகிழ்ந்தனர்: அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றார்.
31. ஆண்டவருடைய இரக்கத்தை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துவார்களாக: மனுமக்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துக் கொள்வார்களாக.
32. மக்களுடைய சபையில் அவரைக் கொண்டாடுவார்களாக: முதியோருடைய கூட்டத்தில் அவரைப் போற்றுவார்களாக.
33. ஆறுகளை அவர் பாலை நிலமாக்கினார்: நீரோடைகளை அவர் வறண்ட தரையாக்கினார்.
34. செழிப்பான நிலத்தை உலர் நிலமாக்கினார்: அங்குக் குடியிருந்தவர்களின் அக்கிரமத்தின் பொருட்டு இப்படிச் செய்தார்.
35. பாலைநிலத்தையோ ஏரியாக மாற்றினார்: வறண்ட நிலத்தை நீரூற்றாக்கினார்.
36. பசியுற்றோரை அங்கே குடியேற்றினார்: அவர்கள் அங்கே குடியிருக்க நகரமொன்றை அமைத்தனர்.
37. அங்கே அவர்கள் உழுது விதைத்தனர்: திராட்சை பயிரிட்டனர்; விளைச்சலைப் பெற்றனர்.
38. அவர் ஆசி வழங்கினார், அவர்கள் பெருந்தொகையாய்ப் பலுகினர்: ஆடு மாடுகளையும் அவர்களுக்குக் கணக்கின்றித் தந்தார்.
39. பின்பு அவர்கள் தொகை குறைந்தது: இகழ்ச்சிக்காளாயினர், ஒடுக்கப்பட்டனர், துன்பங்களுக்குள்ளாயினர்.
40. தலைவர்கள் மேல் இகழ்ச்சி வரப்பண்ணி, அவர்களை மனிதர் நடமாட்டமில்லாத இடங்களில் அலையச் செய்பவர்,
41. எளியவனைத் துன்ப நிலையினின்று தூக்கி விட்டார்: அவர்கள் குடும்பங்களை மந்தை போல் பெருகச் செய்தார்.
42. நேர்மையுள்ளவர்கள் இதைப் பார்க்கின்றனர், பார்த்து மகிழ்கின்றனர்: தீயவர்களோ தங்கள் வாயை மூடிக்கொள்கின்றனர்.
43. ஞானமுள்ளவன் இவற்றையெல்லாம் சிந்திக்கட்டும்: ஆண்டவருடைய இரக்கத்தை ஆழ்ந்து சிந்திக்கட்டும்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 107 of Total Chapters 150
சங்கீதம் 107:11
1. ஆண்டவரைப் போற்றுங்கள், அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்.
2. ஆண்டவரால் மீட்படைந்தோர், எதிரியின் கையினின்று மீட்கப்பட்டோர், இங்ஙனம் சொல்வார்களாக.
3. கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும், பல நாடுகளினின்றும் ஒன்று சேர்க்கப்பட்டவர்களும் இப்படிச் சொல்வார்களாக.
4. பாலை வெளியில் மனிதர் வாழாத இடத்தில் அவர்கள் அலைந்து திரிந்தனர்: குடியிருக்க ஒரு நகருக்குச் செல்ல அவர்கள் வழி காணவில்லை.
5. பசிகொண்டனர், தாகமுற்றனர்: மனமுடைந்து களைத்துப் போயினர்.
6. தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.
7. நேரிய பாதையில் அவர்களை வழி நடத்தினார்: குடியிருக்கும் நகரத்தை அவர்கள் அடையச் செய்தார்.
8. ஆண்டவருடைய இரக்கத்தை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துவார்களாக: மனுமக்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துக் கொள்வார்களாக.
9. பசியுற்றவனுக்கு அவர் நிறைவளித்தார்: பட்டினி கிடந்தவனை நன்மையால் நிரப்பினார்.
10. இருட்டிடங்களில் சோர்வுற்றுக் கிடந்தனர்: விலங்கிடப்பட்டுத் துன்பத்தில் உழன்றனர்.
11. ஏனெனில், கடவுளுடைய வாக்குறுதியை ஏற்காமல் அவரை எதிர்த்தனர்: உன்னதரின் திட்டத்தை அவமதித்தனர்.
12. பல துன்பங்களால் அவர்கள் உள்ளத்தைச் சிறுமைப்படுத்தினார்: தள்ளாடிப் போயினர்; அவர்களுக்குக் கைகொடுக்க ஒருவருமில்லை.
13. தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் விடுவித்தார்.
14. இருட்டிடங்களில் சோர்வுற்றுக் கிடந்த அவர்களை வெளியேற்றினார்: அவர்கள் கட்டுண்டிருந்த விலங்குகளைத் தகர்தெறிந்தார்.
15. ஆண்டவருடைய இரக்கத்தை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துவார்களாக: மனுமக்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துக் கொள்வார்களாக.
16. ஏனெனில், வெண்கலக் கதவுகளை அவர் தகர்த்துவிட்டார்: இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்து விட்டார்.
17. தாங்கள் செய்த அக்கிரமத்தினால் அவர்கள் நோய்களுக்கு உள்ளாயினர்: அவர்களுடைய பாவங்களின் பொருட்டுத் துன்பங்களுக்கு உள்ளாயினர்.
18. எந்த உணவின் மீதும் அவர்கள் மனம் செல்லவில்லை: சாவின் வாயில்களை அவர்கள் நெருங்கினார்கள்.
19. தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.
20. தம் வார்த்தையை விடுத்து அவர்களைக் குணப்படுத்தினார்: அழிவினின்று அவர்களை விடுத்தார்.
21. ஆண்டவருடைய இரக்கத்தை நினைத்து அவருக்கு நன்றி சொல்வார்களாக: மனுமக்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துக் கொள்வார்களாக.
22. புகழ்ச்சிப் பலிகளை அவர்கள் செலுத்துவார்களாக: அக்களிப்போடு அவருடைய செயல்களைச் சாற்றுவார்களாக.
23. அவர்கள் கப்பலேறிக் கடலைக் கடந்து, வியாபாரம் செய்யப் போயிருந்தார்கள்.
24. இவர்களும் ஆண்டவருடைய செயல்களைக் கண்டனர்: கடலில் அவருடைய வியத்தகு செயல்களைப் பார்த்தனர்.
25. அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல்காற்று எழுந்தது: கடல் கொந்தளிக்க, அலைகள் கொதித்தெழுந்தன.
26. வானமட்டும் மேலே வீசப்பட்டனர், பாதாளமட்டும் கீழே எறியப்பட்டனர்: அவர்கள் உள்ளமோ துன்ப நிலையைக் கண்டுத் தளர்வுற்றது.
27. குடியரைப் போல் தள்ளாடினர், தடுமாறினர்: அவர்கள் திறமையெல்லாம் மறைந்து போயிற்று.
28. தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்: அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.
29. புயல்காற்றை அவர் இளந்தென்றலாக மாற்றிவிட்டார்: கடல் அலைகளும் ஓய்ந்து விட்டன.
30. அவ்வமைதியைக் கண்டு அவர்கள் மகிழ்ந்தனர்: அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றார்.
31. ஆண்டவருடைய இரக்கத்தை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துவார்களாக: மனுமக்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துக் கொள்வார்களாக.
32. மக்களுடைய சபையில் அவரைக் கொண்டாடுவார்களாக: முதியோருடைய கூட்டத்தில் அவரைப் போற்றுவார்களாக.
33. ஆறுகளை அவர் பாலை நிலமாக்கினார்: நீரோடைகளை அவர் வறண்ட தரையாக்கினார்.
34. செழிப்பான நிலத்தை உலர் நிலமாக்கினார்: அங்குக் குடியிருந்தவர்களின் அக்கிரமத்தின் பொருட்டு இப்படிச் செய்தார்.
35. பாலைநிலத்தையோ ஏரியாக மாற்றினார்: வறண்ட நிலத்தை நீரூற்றாக்கினார்.
36. பசியுற்றோரை அங்கே குடியேற்றினார்: அவர்கள் அங்கே குடியிருக்க நகரமொன்றை அமைத்தனர்.
37. அங்கே அவர்கள் உழுது விதைத்தனர்: திராட்சை பயிரிட்டனர்; விளைச்சலைப் பெற்றனர்.
38. அவர் ஆசி வழங்கினார், அவர்கள் பெருந்தொகையாய்ப் பலுகினர்: ஆடு மாடுகளையும் அவர்களுக்குக் கணக்கின்றித் தந்தார்.
39. பின்பு அவர்கள் தொகை குறைந்தது: இகழ்ச்சிக்காளாயினர், ஒடுக்கப்பட்டனர், துன்பங்களுக்குள்ளாயினர்.
40. தலைவர்கள் மேல் இகழ்ச்சி வரப்பண்ணி, அவர்களை மனிதர் நடமாட்டமில்லாத இடங்களில் அலையச் செய்பவர்,
41. எளியவனைத் துன்ப நிலையினின்று தூக்கி விட்டார்: அவர்கள் குடும்பங்களை மந்தை போல் பெருகச் செய்தார்.
42. நேர்மையுள்ளவர்கள் இதைப் பார்க்கின்றனர், பார்த்து மகிழ்கின்றனர்: தீயவர்களோ தங்கள் வாயை மூடிக்கொள்கின்றனர்.
43. ஞானமுள்ளவன் இவற்றையெல்லாம் சிந்திக்கட்டும்: ஆண்டவருடைய இரக்கத்தை ஆழ்ந்து சிந்திக்கட்டும்.
Total 150 Chapters, Current Chapter 107 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References