1. அல்லேலூயா! ஆண்டவரைப் போற்றுங்கள், ஏனெனில், அவர் நன்மை மிகுந்தவர்: என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்.
|
2. ஆண்டவர் செய்த வல்லமை மிக்க செயல்களை யார் எடுத்துரைக்க இயலும்? அவருடைய புகழனைத்தையும் யார் விளம்ப இயலும்?
|
4. ஆண்டவரே, நீர் உம் மக்களின் மீது காட்டிய கருணைக்கேற்ப என்னை நினைவுகூரும்: உமது உதவியை எனக்குத் தாரும்.
|
5. அப்போது உம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்குள்ள பெரும் பேற்றைக் கண்டு நான் இன்புறுவேன்: உம் மக்களின் மகிழ்ச்சியைக் கண்டு நானும் மகிழ்ச்சியுறுவேன்; உம் உரிமைப் பேறான மக்களோடு நான் பெருமை அடைவேன்.
|
7. எங்கள் முன்னோர்கள் எகிப்தில் நீர் செய்த அற்புதச் செயல்களை உணரவில்லை; உமது இரக்கப் பெருக்கை அவர்கள் நினைவு கூரவில்லை: மாறாக, உன்னதரை எதிர்த்துச் செங்கடலருகில் கலகம் விளைவித்தனர்.
|
9. செங்கடலை அதட்டினார், அது உலர்ந்து போயிற்று: பாலை வெளியில் நடப்பது போல் அவர்களைக் கடல் வழியே அழைத்துச் சென்றார்.
|
13. ஆனால் அவர் செய்த செயல்களை விரைவிலேயே மறந்து விட்டனர் அவரது திட்டத்தின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை.
|
16. பாசாறையில் வாழ்ந்த காலத்தில் மோயீசன் மீது பொறாமை கொண்டனர்: ஆண்டவருக்கு உகந்தவரான ஆரோனின் மீதும் பொறாமை கொண்டனர்.
|
23. இறைவன் அவர்களை அடியோடு தொலைத்து விட எண்ணினார்: ஆனால் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோயீசன் குறுக்கிட்டார். அவரிடம் அவர்களுக்காகப் பரிந்து பேசினார்: அவர் கொண்ட சினத்தை அமர்த்தலானார்; அவர்களை அழித்து விடாதபடி செய்தார்.
|
35. அதோடு அவ்வேற்றினத்தாரோடு சேர்ந்து கொண்டனர்: அவர்கள் செய்த அக்கிரமங்களையே இவர்களும் செய்யலாயினர்.
|
38. மாசற்ற இரத்தத்தை இப்படி அவர்கள் சிந்தினர்: தங்கள் குழந்தைகளின் இரத்தத்தைச் சிந்தினர், கானான் நாட்டுச் சிலைகளுக்கு அவர்களைப் பலியிட்டனர்: நாடு முழுவதும் அந்த இரத்தத்தால் தீட்டுப்பட்டது.
|
41. புறவினத்தார் கையில் அவர்களை விட்டுவிட்டார்: அவர்களைப் பகைத்தவர்களே அவர்கள் மீது அதிகாரம் செலுத்தலாயினர்.
|
43. எத்தனையோ முறை அவர்களை விடுவித்தார்: அவர்கள் அவருக்கு மனக்கசப்பு உண்டாக்கினர்; அவர்கள் செய்த அக்கிரமங்களின் பொருட்டு வதைக்கப்பட்டனர்.
|
45. அவர்களுக்கு அருள் கூரும் பொருட்டுத் தம் உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்; தம் அருள் அன்பை நினைத்து இரக்கம் காட்டினார்.
|
47. ஆண்டவரே, எம் இறைவா எங்களை மீட்டருளும்: எல்லா நாடுகளினின்றும் எங்களைக் கூட்டிச் சேர்த்தருளும். அப்போது நாங்கள் உமது பெயரைக் கொண்டாடுவோம்: உமக்குள்ள புகழை நினைத்துப் பெருமைப் படுவோம்.
|
48. இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் என்றென்றும் போற்றி! அல்லேலூயா மக்கள் எல்லாரும் அதற்கு 'ஆமென்' என்பார்களாக.
|