2. மாண்பும் மகத்துவமும் நீர் அணிந்திருக்கிறீர்: ஒளியை நீர் போர்வையாகக் கொண்டுள்ளீர்; வானத்தை நீர் கூடாரம் போல் விரித்திருக்கிறீர்.
|
3. வெள்ளத்தின்மேல் உம் உறைவிடத்தை அமைத்திருக்கிறீர்; மேகங்களை நீர் தேராகக் கொண்டிருக்கிறீர்: காற்றை நீர் இறக்கை எனக் கொண்டு செல்கிறீர்.
|
9. நீர் குறித்த எல்லையை அவைகள் கடக்காமல் இருக்கச் செய்தீர்: மீளவும் அவை பூமியை மூழ்கடிக்காதபடி இவ்வாறு செய்தீர்.
|
11. வயல்வெளிகளில் வாழும் விலங்குகள் தாகம் தீர்க்கத் தண்ணீர் கொடுத்தீர்: காட்டுக் கழுதைகள் தங்கள் தாகத்தை அங்கே தான் தீர்த்து கொள்கின்றன.
|
13. தம் உள்ளத்திடத்திலிருந்து மலைகள் மீது நீர் பாயச் செய்கிறீர்: உம் செயல்களின் பயனால் மாநிலம் நிறைவுறுகின்றது.
|
14. கால்நடைகள் உண்ணப் புல் முளைக்கச் செய்கிறீர்: மனிதருக்குப் பயன்படப் பயிர் பச்சைகள் வளரச் செய்கிறீர். இவ்வாறு நிலத்தினின்று மனிதர் உணவுப் பொருள் விளையச் செய்யவும்.
|
15. மனிதன் மகிழ்ச்சியுற, உள்ளம் மகிழச் செய்யும் திராட்சை இரசம் உண்டாகச் செய்யவும் முடிந்தது: முகத்துக்கு களை தரும் எண்ணெயும், உள்ளத்திற்கு உரம் தரும் உணவையும் அவன் விளையச் செய்கிறான்.
|
16. ஆண்டவர் நட்ட மரங்களுக்கு நிறைய நீர் கிடைக்கிறது: லீபானில் அவர் நட்ட கேதுரு மரங்கள் செழித்து வளருகின்றன.
|
24. ஆண்டவரே, உம் வேலைப்பாடுகள், எத்தனை, எத்தனை! அனைத்தையும் நீர் ஞானத்தோடு செய்து முடித்தீர்: உம் படைப்புகளால் நிறைந்துள்ளது வையகம்.
|
25. இதோ, பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்: அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன.
|
29. உம் முகத்தை நீர் மறைத்துக் கொண்டால், அவை தத்தளிக்கும். அவற்றின் மூச்சை நீர் நிறுத்தி விட்டால் அவை மடிந்து மறுபடியும் மண்ணாகி விடும்.
|
35. பாவிகள் பாரினின்று எடுபடுவார்களாக; தீயோர்கள் இனி இல்லாதொழிவார்களாக: நெஞ்சே ஆண்டவரை நீ வாழ்த்துவாயாக!
|