தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. நெஞ்சே, நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக: என் அகத்துள்ளதெல்லாம் அவரது திருப்பெயரை வாழ்த்துவதாக!
2. நெஞ்சே, நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக: அவர் செய்த நன்மைகளையெல்லாம் மறவாதே.
3. அவர் உன் பாவங்களை எல்லாம் மன்னிக்கிறார்: உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்.
4. உன் உயிரை அழிவினின்று மீட்கிறார்: அருளையும் இரக்கத்தையும் உனக்கு முடியாகச் சூட்டுகிறார்.
5. நன்மைகளால் உன் வாழ்வை நிறைவுபடுத்துகிறார்: கழுகுகளின் இளமையைப் போல் உன் இளமையைப் புதுப்பிக்கிறார்.
6. நீதிமிக்க செயல்களைப் புரிகிறார் ஆண்டவர்: துன்புற்றோர் யாவருக்கும் நீதி வழங்குகிறார்.
7. மோயீசனுக்குத் தம் வழிகளை வெளிப்படுத்தினார்: இஸ்ராயேல் மக்களுக்குத் தம் செயல்களை விவரிக்கச் செய்தார்.
8. ஆண்டவர் அன்பும் அருளும் மிக்கவர்: சினங்கொள்ளத் தாமதிப்பவர்; சாந்தமுடையவர்.
9. ஓயாமல் கடிந்து கொள்பவரல்லர்; எந்நேரமும் கோபங் காட்டுபவரல்லர்.
10. நம்முடைய பாவங்களுக்கு ஏற்றபடி நடத்துவதில்லை: நம் குற்றங்களுக்குத் தக்கபடி நம்மைத் தண்டிப்பதில்லை.
11. ஏனெனில், வானுலகம் பூவுலகிற்கு எவ்வளவு உயர்ந்துள்ளதோ, அவ்வளவுக்கு அவர் தமக்கு அஞ்சி நடப்பவர்களுக்குத் தயவு காண்பிக்கிறார்.
12. கீழ்த்திசைக்கும் மேற்றிசைக்குமிடையே எவ்வளவு தொலையுள்ளதோ, அவ்வளவு தொலைவுக்கு அவர் நம் பாவங்களை நம்மிடமிருந்து அகற்றி விடுகிறார்.
13. தந்தை தம் மக்களுக்கு அன்பு காட்டுவது போல, ஆண்டவர் தமக்கு அஞ்சுவோருக்கு இரக்கம் காட்டுகிறார்.
14. ஏனெனில், அவர் நம்முடைய நிலைமையை நன்றாய் அறிந்திருக்கிறார்: நாம் தூசிக்குச் சமம் என்பது அவருக்குத் தெரியாமலில்லை.
15. மனிதனின் வாழ்நாள் புல்லைப் போன்றது: வயல்வெளிப் பூக்களைப் போல் அவன் மலர்கிறான்;
16. காற்றடித்ததும் அது வதங்கி விடுகிறது: இருக்கிற இடம் தெரியாமல் போய் விடுகிறது.
17. ஆண்டவருடைய இரக்கமோ அவருக்கு அஞ்சி நடப்போர் மீது என்றென்றும் நிலைநிற்கும்: அவருடைய நீதியோ தலைமுறை தலைமுறையாய் நிலைத்திருக்கும்.
18. அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போர் மேலும், கட்டளைகளைக் கருத்தில் கொண்டு அவற்றைப் பின்பற்றுவோர் மேலும் அவர் நீதி நிலைகொள்ளும்.
19. ஆண்டவர் வானுலகில் தமது அரியணையை ஏற்படுத்தினார்: அனைத்தின் மீதும் அவர் ஆட்சி புரிகிறார்.
20. வானதூதர்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்: ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய சொற்படி நடக்கும் ஆண்டவரின் வல்லமையுள்ள தூதர்களே, அவரை வாழ்த்துங்கள்.
21. ஆண்டவருடைய திருவுளப்படி நடக்கும் அவருடைய ஊழியர்களே, அவரைப் போற்றுங்கள்: அவருடைய சேனைகளே, அவரை வாழ்த்துங்கள்!
22. ஆண்டவருடைய படைப்புகளே, அவருடைய ஆளுகை செல்லுகிற இடமெல்லாம் அவரை வாழ்த்துங்கள்: நெஞ்சே, நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக!

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 103 of Total Chapters 150
சங்கீதம் 103:8
1. நெஞ்சே, நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக: என் அகத்துள்ளதெல்லாம் அவரது திருப்பெயரை வாழ்த்துவதாக!
2. நெஞ்சே, நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக: அவர் செய்த நன்மைகளையெல்லாம் மறவாதே.
3. அவர் உன் பாவங்களை எல்லாம் மன்னிக்கிறார்: உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்.
4. உன் உயிரை அழிவினின்று மீட்கிறார்: அருளையும் இரக்கத்தையும் உனக்கு முடியாகச் சூட்டுகிறார்.
5. நன்மைகளால் உன் வாழ்வை நிறைவுபடுத்துகிறார்: கழுகுகளின் இளமையைப் போல் உன் இளமையைப் புதுப்பிக்கிறார்.
6. நீதிமிக்க செயல்களைப் புரிகிறார் ஆண்டவர்: துன்புற்றோர் யாவருக்கும் நீதி வழங்குகிறார்.
7. மோயீசனுக்குத் தம் வழிகளை வெளிப்படுத்தினார்: இஸ்ராயேல் மக்களுக்குத் தம் செயல்களை விவரிக்கச் செய்தார்.
8. ஆண்டவர் அன்பும் அருளும் மிக்கவர்: சினங்கொள்ளத் தாமதிப்பவர்; சாந்தமுடையவர்.
9. ஓயாமல் கடிந்து கொள்பவரல்லர்; எந்நேரமும் கோபங் காட்டுபவரல்லர்.
10. நம்முடைய பாவங்களுக்கு ஏற்றபடி நடத்துவதில்லை: நம் குற்றங்களுக்குத் தக்கபடி நம்மைத் தண்டிப்பதில்லை.
11. ஏனெனில், வானுலகம் பூவுலகிற்கு எவ்வளவு உயர்ந்துள்ளதோ, அவ்வளவுக்கு அவர் தமக்கு அஞ்சி நடப்பவர்களுக்குத் தயவு காண்பிக்கிறார்.
12. கீழ்த்திசைக்கும் மேற்றிசைக்குமிடையே எவ்வளவு தொலையுள்ளதோ, அவ்வளவு தொலைவுக்கு அவர் நம் பாவங்களை நம்மிடமிருந்து அகற்றி விடுகிறார்.
13. தந்தை தம் மக்களுக்கு அன்பு காட்டுவது போல, ஆண்டவர் தமக்கு அஞ்சுவோருக்கு இரக்கம் காட்டுகிறார்.
14. ஏனெனில், அவர் நம்முடைய நிலைமையை நன்றாய் அறிந்திருக்கிறார்: நாம் தூசிக்குச் சமம் என்பது அவருக்குத் தெரியாமலில்லை.
15. மனிதனின் வாழ்நாள் புல்லைப் போன்றது: வயல்வெளிப் பூக்களைப் போல் அவன் மலர்கிறான்;
16. காற்றடித்ததும் அது வதங்கி விடுகிறது: இருக்கிற இடம் தெரியாமல் போய் விடுகிறது.
17. ஆண்டவருடைய இரக்கமோ அவருக்கு அஞ்சி நடப்போர் மீது என்றென்றும் நிலைநிற்கும்: அவருடைய நீதியோ தலைமுறை தலைமுறையாய் நிலைத்திருக்கும்.
18. அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போர் மேலும், கட்டளைகளைக் கருத்தில் கொண்டு அவற்றைப் பின்பற்றுவோர் மேலும் அவர் நீதி நிலைகொள்ளும்.
19. ஆண்டவர் வானுலகில் தமது அரியணையை ஏற்படுத்தினார்: அனைத்தின் மீதும் அவர் ஆட்சி புரிகிறார்.
20. வானதூதர்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்: ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய சொற்படி நடக்கும் ஆண்டவரின் வல்லமையுள்ள தூதர்களே, அவரை வாழ்த்துங்கள்.
21. ஆண்டவருடைய திருவுளப்படி நடக்கும் அவருடைய ஊழியர்களே, அவரைப் போற்றுங்கள்: அவருடைய சேனைகளே, அவரை வாழ்த்துங்கள்!
22. ஆண்டவருடைய படைப்புகளே, அவருடைய ஆளுகை செல்லுகிற இடமெல்லாம் அவரை வாழ்த்துங்கள்: நெஞ்சே, நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக!
Total 150 Chapters, Current Chapter 103 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References