5. நன்மைகளால் உன் வாழ்வை நிறைவுபடுத்துகிறார்: கழுகுகளின் இளமையைப் போல் உன் இளமையைப் புதுப்பிக்கிறார்.
|
7. மோயீசனுக்குத் தம் வழிகளை வெளிப்படுத்தினார்: இஸ்ராயேல் மக்களுக்குத் தம் செயல்களை விவரிக்கச் செய்தார்.
|
10. நம்முடைய பாவங்களுக்கு ஏற்றபடி நடத்துவதில்லை: நம் குற்றங்களுக்குத் தக்கபடி நம்மைத் தண்டிப்பதில்லை.
|
11. ஏனெனில், வானுலகம் பூவுலகிற்கு எவ்வளவு உயர்ந்துள்ளதோ, அவ்வளவுக்கு அவர் தமக்கு அஞ்சி நடப்பவர்களுக்குத் தயவு காண்பிக்கிறார்.
|
12. கீழ்த்திசைக்கும் மேற்றிசைக்குமிடையே எவ்வளவு தொலையுள்ளதோ, அவ்வளவு தொலைவுக்கு அவர் நம் பாவங்களை நம்மிடமிருந்து அகற்றி விடுகிறார்.
|
14. ஏனெனில், அவர் நம்முடைய நிலைமையை நன்றாய் அறிந்திருக்கிறார்: நாம் தூசிக்குச் சமம் என்பது அவருக்குத் தெரியாமலில்லை.
|
17. ஆண்டவருடைய இரக்கமோ அவருக்கு அஞ்சி நடப்போர் மீது என்றென்றும் நிலைநிற்கும்: அவருடைய நீதியோ தலைமுறை தலைமுறையாய் நிலைத்திருக்கும்.
|
18. அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போர் மேலும், கட்டளைகளைக் கருத்தில் கொண்டு அவற்றைப் பின்பற்றுவோர் மேலும் அவர் நீதி நிலைகொள்ளும்.
|
20. வானதூதர்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்: ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய சொற்படி நடக்கும் ஆண்டவரின் வல்லமையுள்ள தூதர்களே, அவரை வாழ்த்துங்கள்.
|
21. ஆண்டவருடைய திருவுளப்படி நடக்கும் அவருடைய ஊழியர்களே, அவரைப் போற்றுங்கள்: அவருடைய சேனைகளே, அவரை வாழ்த்துங்கள்!
|
22. ஆண்டவருடைய படைப்புகளே, அவருடைய ஆளுகை செல்லுகிற இடமெல்லாம் அவரை வாழ்த்துங்கள்: நெஞ்சே, நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக!
|