2. இடுக்கண் உற்ற நாளில் உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக்கொள்ளாதேயும்: என் வேண்டுதலுக்கு செவிசாய்த்தருளும்; உம்மைக் கூவியழைக்கும் போது விரைவாக என் வேண்டுதலைக் கேட்டருளும்.
|
8. என் எதிரிகள் என்னை எந்நேரமும் பழிக்கின்றனர்: என்மேல் மூர்க்க வெறிகொண்டவர்கள் என் பெயரைச் சொல்லிச் சபிக்கின்றனர்.
|
10. உமது வெகுளிக்கும் வெஞ்சினத்துக்குமுன் நடுங்குகின்றேன்: ஏனெனில் என்னை வெகுவாய் உயர்த்தினீர், பின்னர் தூக்கி எறிந்து விட்டீர்.
|
12. நீரோ ஆண்டவரே, என்றென்றும் நிலைத்துள்ளீர்: உமது பெயரின் புகழ் தலைமுறை தலைமுறையாய் நிலைத்திருக்கும்.
|
13. நீர் எழுந்து சீயோனுக்கு இரக்கம் காட்டும்: அதன் மீது இரக்கம் காட்ட காலம் வந்தது; இதோ ஏற்ற வேளை வந்துள்ளது.
|
15. ஆண்டவரே, புற இனத்தார் உமது பெயரைக் கேட்டு அச்சம் கொள்வர்; மாநிலத்து அரசர்கள் அனைவரும் உமது மாட்சிமை கண்டு மருள்வர்.
|
20. உன்னதங்களிலுள்ள தம் திருத்தலத்தினின்று ஆண்டவர் தம் பார்வையைத் திருப்பினார்: வானினின்று வையகத்தை நோக்கினார்.
|
24. நானோ வேண்டுதல் செய்தது: "என் இறைவா, என் வாழ்நாளின் பாதியில் என்னை எடுத்து விடாதீர்: உம் காலம் தலைமுறை தலைமுறையாய் உள்ளதன்றோ!"
|
26. (25b) இவையெல்லாம் அழிந்துவிடும், நீரோ நிலைநிற்பீர்: அனைத்துமே ஆடையைப் போல் பழமையடையும், துணிமணி போல் நீர் அவற்றை மாற்றுகிறீர்; அவையும் மாறிப்போம்.
|