1. என் மகனே, நான் உனக்குக் கற்றுக் கொடுக்கிற ஞானத்தைக் கவனி. என் ஞானம் நிறை வார்த்தைகளுக்கும் செவி கொடு.
|
2. அவ்வாறு செய்தால்தான் நீ உன் நினைவுகளைக் காக்கவும், உன் உதடுகள் என் போதனையை மதிக்கவுங் கூடும். பெண்ணின் பசப்புக்கு இணங்காதே.
|
3. வேசியின் உதடுகள் தேனைவிடத் துளிக்கின்றதாயும், அவள் தொண்டை தைலத்தைவிட மிக மென்மையானதுமாயும் இருக்கின்றன.
|
4. ஆனால், அவளுடைய முடிவுகள் மருக்கொழுந்துபோல் கசப்பானவையும், இருபுறமும் துவைந்த வாள்போல் கூரானவையுமாம்.
|
6. வாழ்வு நெறியில் அவை நடப்பதில்லை. அவள் அடிகள் நிலையற்றனவும் ஆராய்ச்சிக்கு எட்டாதனவுமாய் இருக்கின்றன.
|
10. கொடுத்தால், அன்னியர் உன்னாலே ஆற்றலுள்ளவராகக்கூடும். மேலும், உன் உழைப்பின் பலன் அவர்கள் வீட்டில் போய்ச் சேரும்.
|
11. அப்பொழுது உன் மாமிசத்தையும் உன் உடம்பையும் அழித்துக் கெடுத்த பின்பு, கடைசியில், நீ பெருமூச்செறிந்து புலம்பி:
|
13. நான் எனக்கு அறிவுறுத்தியவர்களுடைய வாக்கைக் கேட்கவுமில்லை; என் ஆசிரியர்களுக்குச் செவி சாய்க்கவுமில்லை.
|
14. (ஆதலால்), ஏறக்குறைய எல்லாத் தீமைகளும் சபையிலும் சங்கத்தின் மத்தியிலும் என்மேல் விழுந்தன என்பாய்.
|
17. நீ (மட்டும்) தனியனாய் அவற்றைக் கொண்டிரு; அன்னியர் அக்காரியத்திலே உன் பங்காளிகளாய் இருத்தல் தகாது.
|
19. அவள் உனக்கு மிகவும் அன்பிக்குரிய பெண்மானும், மிகப்பிரியமுள்ள மான் குட்டியும்போல் இருக்கக்கடவாள். அவள் கொங்கைகள் உன்னை எப்போதும் இன்பத்தால் நிறைப்பன. இடைவிடாமல் அவளுடைய அன்பில் இன்பம் துய்ப்பாயாக.
|
22. அக்கிரமிகள் தங்கள் சொந்த அநீதங்களாகிய கண்ணிக்குள்ளே சிக்கிப்போய், பாவக் கயிறுகளாலேயே கட்டவும் படுகிறார்கள்.
|
23. அக்கிரமி கண்டனத்தை ஏற்றுக் கொள்ளாததனால் (தன் அக்கிரமத்தில்) மடிவான். அவன் தன் மிகுதியான அறிவீனத்தால் ஏமாற்றப்படுவான்.
|