4. அரசருக்கு வேண்டாம், ஓ லாமுவேல்! அரசருக்குக் கொடிமுந்திரிப்பழச் சாற்றைக் கொடுக்கவேண்டாம். ஏனென்றால், குடிமயக்கம் ஆள்கின்ற இடத்தில் இரகசியமே கிடையாது.
|
5. அவர்கள் மதுபானம் அருந்தினால் ஒருவேளை நீதித்தீர்ப்புகளையும் மறந்து, ஏழையின் மக்களுடைய வழக்கையும் மாற்றுவார்கள்.
|
6. சஞ்சலமுள்ளவர்களுக்கு மதுபானத்தையும், துயர மனமுடையோருக்குக் கொடிமுந்திரிப் பழச் சாற்றையும் கொடுங்கள்.
|
10. வல்லமையுள்ள பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார் ? அவள் தூரமாய்க் கடைகோடிகளினின்று அடையப்பெற்ற செல்வமாம்.
|
15. இரவிலே எழுந்து தன் ஊழியருக்கு அருமையான பொருளையும், தன் ஊழியக்காரிகளுக்கு உணவு வகைகளையும் தந்தாள்.
|
16. வயல் நிலத்தையும் ஆராய்ந்து பார்த்து அதை வாங்கினாள். தன் கைகளின் பலத்தால் கொடிமுந்திரித் தோட்டத்தையும் நட்டாள்.
|
21. பனியின் குளிர் நிமித்தம் தன் வீட்டாரைப்பற்றி அஞ்சமாட்டாள். ஏனென்றால், அவளுடைய ஊழியர் அனைவருமே இரட்டை (ஆடை)யால் உடுத்தப் பட்டிருக்கிறார்கள்.
|
22. கம்பளி ஆடையைத் தனக்குச் செய்திருக்கிறான். மெல்லிய சணலும் கருஞ் சிவப்பு ஆடையும் அவளுடைய போர்வையாம்.
|
28. அவளுடைய புதல்வர் எழுந்து அவளைப் பேறுடையாள் என்று முழங்கினார்கள். அவள் கணவனும் அவளைப் புகழ்ந்தான்.
|
31. அவளுடைய கைகளினின்று பெறும் பலனை அவளுக்கே கொடுங்கள். அவளுடைய செயல்களே (நடுவரின்) சங்கங்களில் அவளைப் புகழக்கடவன.
|