3. பாறை கனமாயும், மணல் பாரமாயும் இருக்கின்றன. ஆனால், மதியீனரின் கோபமோ இவ்விரண்டையும்விட அதிகக் கனமானது.
|
4. சினமும், பொங்குகின்ற கோபவேறியும் இரக்கமற்றவை. கோப வெறியனுடைய கோபத்தின் கொடுமையைப் பொறுக்கக் கூடியவன் யார் ?
|
7. பசியாற உண்டவன் தேனையும் காலால் மிதிப்பான். பசியால் வருந்துகின்றவன் கசப்பானதையும் இனிப்பென்று அருந்துவான்.
|
9. நறுமணத் தைலத்தாலும் வெவ்வேறு நறுமணப் பொருட்களாலும் இதயம் அக்களிக்கின்றது. ஆன்மாவோ நண்பனின் நல்லாலோசனைகளால் அக்களிக்கின்றது.
|
10. உன் நண்பனையும் உன் தந்தையின் நண்பனையும் கைவிடாதே. உன் துயர நாளில் உன் சகோதரன் வீட்டில் நுழையாதே. தூரமாயிருக்கிற சகோதரனைவிட அருகிலுள்ள அயலானே தாவிளை.
|
11. உன்னைக் கண்டிக்கிறவனுக்கு மறுமொழி சொல்லும்படியாக, என் மகனே, ஞானத்தைப் படித்து என் இதயத்தை மகிழ்வி.
|
12. விவேகமுள்ளவன் தீமையைக் கண்டு மறைந்து கொண்டான். அதைக் கவனியாமையால் (மற்றவர்கள்) துன்பங்களை அனுபவித்தார்கள்.
|
14. விடியற்காலை உரத்த குரலில் தன் அயலானை ஆசீர்வதிக்கிறவன், இரவில் எழுந்து அவனைச் சபிக்கிறவனுக்குச் சரியொத்தவனாய் இருக்கிறான்.
|
16. அவளை அடக்குகிறவன் காற்றைப் பிடிக்கிறவனுக்குச் சமானம். அவன் அதனைத் தன் வலக்கைத் தைலமென்றே அழைப்பான்.
|
18. அத்தி மரத்தைப் பேணி வளர்ப்பவன் அதன் கனிகளை உண்பான். தன் ஆண்டவரின் பாதுகாவலில் இருப்பவன் எவனோ, அவன் மகிமைப்படுத்தப் பெறுவான்.
|
19. நீரில் பார்க்கிறவர்களுடைய முகம் எவ்வாறு துலங்குகின்றதோ, அவ்வாறே மனிதர்களுடைய இதயங்கள் விவேகிகளுக்கு வெளியரங்கமாய் இருக்கின்றன.
|
21. உலைக்களத்தில் வெள்ளியும் உலையில் பொன்னும் பரிசோதிக்கப்படுவதுபோல, மனிதன் தன்னைப் புகழ்கின்றவனுடைய வாயால் பரிசோதிக்கப்படுகிறான். அக்கிரமியின் இதயம் தீமையைத் தேடுகின்றது. நேர்மையான இதயமோ அறிவைத் தேடுகின்றது.
|
22. வாற்கோதுமையை உலக்கையால் இடிப்பது போல் மதியீனனை உரலில் (இட்டுக்) குத்தினாலும் அவனுடைய மதியீனம் அவனிடமிருந்து பிரிக்கப்படமாட்டாது.
|
24. ஏனென்றால், நீ எப்போதும் நலமுடையவனாய் இராய். மேலும், தலைமுறை தலைமுறையாய் கிரீடம் கொடுக்கப்படவு மாட்டாது.
|
25. புல் தரையில் புல் முளைத்திருக்கின்றது. பசுமை நிறை பூண்டுகள் காணப்படுகின்றன. மலைகளினின்று காய்ந்த புல்லும் சேகரிக்கப்பட்டிருக்கின்றது.
|
27. வெள்ளாடுகளின் பால் உன் உணவுகளுக்கும், உன் விட்டின் தேவைகளுக்கும், உன் ஊழியரின் உணவுக்கும் போதியனவாய் இருக்கட்டும்.
|