4. அறிவினால் அவ்வீட்டின் அறைகள் விலை உயர்ந்தனவும், மிகவும் அலங்காரமுள்ளனவுமான எவ்விதப் பொருளாலும் நிறைக்கப்படும்.
|
5. ஞானமுள்ள மனிதன் வல்லவனாய் இருக்கிறான். கற்றறிந்த மனிதன் துணிவும் பேராற்றலும் வாய்ந்தவனாக இருக்கிறான்.
|
11. சாவுக்குக் கூட்டிப்போகப் படுகிறவர்களை விடுவி. நரகத்திற்கு இழுக்கப்படுகிறவர்களை மீட்கவும் நீ பின்வாங்காதே.
|
12. எனக்கு ஆற்றல் போதாது என்று நீ சொல்வாயானால், இதயத்திலுள்ளதைக் காண்கிறவர் அறிகிறார்; உன் ஆன்மாவின் காவலரை ஒன்றும் ஏமாற்றுவதில்லை. அவர் அவனவன் செயல்களுக்குத் தக்கபடி பதிலளிக்கிறார்.
|
13. என் மகனே, தேன் உன் வாய்க்கு இனிப்பாய் இருக்கிறது; அதை உண். தேனென்றால் உன் தொண்டைக்கு மிகவும் இனிமையாம்.
|
14. அவ்வாறே உன் ஆன்மாவுக்கு ஞானத்தின் போதகமுமாம். அதை நீ கண்டுபிடித்தால், (உன்) முடிவில் உனக்கு நம்பிக்கை உண்டாகும்; உன் நம்பிக்கையும் வீணாகாது.
|
16. ஏனென்றால், நீதிமான் ஏழு முறை விழுந்தாலும் எழுந்திருப்பான். அக்கிரமிகளோ தீமையில் விழுந்து அழிவார்கள்.
|
18. (ஏனென்றால்) ஆண்டவர் அதைக்கண்டு, உன்மீது வருத்தமுற்று, அவன்மேல் வைத்த கோபத்தை அகற்றி, அதை உன்மேல் திருப்பினாலும் திருப்புவார்.
|
23. இதுவும் ஞானிகள் கற்றுக் கொடுப்பார்கள். அதாவது: நியாயத் தீர்ப்பில் ஒருதலைச் சார்பு கொள்தல் நன்றன்று.
|
24. அக்கிரமியை நோக்கி: நீ நீதிமான் என்று (தவறாய்ச்) சொல்கிறவர்கள் மக்களால் சபிக்கப்படுவார்கள்; அவன் குலத்தினர் அவர்களை வெறுப்பார்கள்.
|
29. எனக்குச் செய்ததுபோல் அவனுக்கும் செய்வேன் என்று கூறாதே. அவனவன் செயலுக்குத் தக்கபடியே (நான்) பதிலளிப்பேன்.
|
30. சோம்பேறியான மனிதனின் வயல் வழியாயும், மதிகெட்ட மனிதனின் கொடி முந்திரித் தோட்டத்தின் வழியாயும் நடந்து சென்றேன்.
|
31. இதோ, எங்கே பார்த்தாலும் காஞ்சொறி நிறைந்து முட்கள் செறிந்து மூடியிருந்தன. அன்றியும், கற்சுவரும் அழிந்து போயிருந்தது.
|